மத்திய அரசு ஊழியர்களுக்கு குடும்ப பென்ஷனில் மாற்றங்கள் – புதிய அறிவிப்பு!
மத்திய அரசு ஊழியர்களுக்கு பல்வேறு வகையான சலுகைகளை மத்திய அரசு வழங்கி வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கான குடும்ப ஓய்வூதியத்தில் சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. இது தொடர்பான தகவல்களை பற்றி பார்ப்போம்.
ஊழியர்கள் கவனத்திற்கு:
இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை அகவிலைப்படி உயர்வு, சம்பள உயர்வு, வீட்டு வாடகைப்படி உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதையடுத்து தற்போது மத்திய அரசு ஊழியர்கள் 34% அகவிலைப்படி பெற்று வருகின்றனர். ஓர் ஆண்டுக்கு இரு முறை அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுவதால் இந்த ஆண்டு மீண்டும் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட உள்ளது. அத்துடன் இம்முறை 4% வரை அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து தற்போது குடும்ப ஓய்வூதியத்தில் புதிய விதிமுறைகளை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.
இந்த புதிய விதிமுறைப்படி, தீவிரவாதம் மற்றும் மாவோயிஸ்ட் ஊடுருவலால் பாதிக்கப்பட்டுள்ள வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் ஜம்மு காஷ்மீரில் காணாமல் போன ஊழியர்களுக்கு இந்த புதிய விதிமுறை பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தீவிரவாதம் மற்றும் மாவோயிஸ்ட் ஊடுருவலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பணியில் இருக்கும் போது மத்திய அரசு ஊழியர்கள் காணாமல் போனால் அவர்களின் குடும்பத்துக்கு குடும்ப பென்சன் வழங்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் சம்பள நிலுவைத் தொகை, பணிக்கால பணிக்கொடை, ஈட்டிய விடுப்பு உள்ளிட்டவை வழங்கப்பட வேண்டும்.
இந்தியாவில் அரிசி விலை 10% அதிகரிப்பு? அதிர்ச்சியில் பொதுமக்கள்!
இதனை தொடர்ந்து காணாமல் போன அரசு ஊழியர் மீண்டும் பணிக்கு திரும்பும் போது, அவர் தொலைந்து போன காலத்தில் அவரது குடும்பத்துக்கு செலுத்தப்பட்டு வந்த பென்சன் தொகை அவரின் சம்பளத் தொகையில் பிடித்தம் செய்யப்பட்டு வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. அத்துடன் பழைய விதிமுறைகளின்படி மத்திய அரசு ஊழியர் பணிக்காலத்தின்போது தொலைந்துவிட்டால் அவரது குடும்பத்துக்கு பென்சன் வழங்கப்படாது என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் மத்திய அரசு ஊழியர்கள் தொலைந்து 7 ஆண்டுகள் கழித்த பிறகு அல்லது அவர் இறந்துவிட்டால் என உறுதி செய்யப்பட்ட பின்பு குடும்ப ஓய்வூதியம் வழங்கப்பட்டது.