ஜூலை 1 முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு DA உயர்வு – சம்பளம் எவ்வளவு உயரும்?
கொரோனா பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவினால் மத்திய அரசு ஊழியர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த அகவிலைப்படி (DA) உயர்வு வருகிற ஜூலை 1ம் தேதி முதல் மீண்டும் வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் எவ்வளவு மாத ஊதியம் உயரும் என்பதை இப்பதிவில் காணலாம்.
அகவிலைப்படி உயர்வு:
மத்திய அரசு ஊழியர்களுக்கு தற்போது, DA அடிப்படை ஊதியத்தில் 17% செலுத்தப்படுகிறது. ஜூலை 2021 முதல் மீண்டும் DA வழங்கப்பட்ட பின்னர் 11% அதிகரித்து 28% ஆக உயர்த்தப்படும். 52 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 65 லட்சத்துக்கும் மேற்பட்ட ஓய்வூதியம் பெறுவோர் அனைவரும் 2021 ஜூலை 1 முதல் 7வது ஊதியக்குழுவின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட படி சலுகைகளைப் பெறத் தொடங்குவர் என கூறப்படுகிறது.
தமிழகத்தில் 4 மாவட்டங்களில் பேருந்து சேவைகள் – ஜூன் 28 வரை ஊரடங்கு நீட்டிப்பு!
அடுத்த மாதம் முதல் நிறுத்தப்பட்ட டிஏ மற்றும் டிஆர் ஆகியவற்றை வழங்குவதை மத்திய அரசு சமீபத்தில் நாடாளுமன்றத்தில் உறுதிப்படுத்தியுள்ளது. இருப்பினும், பல ஊழியர்கள் தங்களது 7வது ஊதிய கமிஷன் படி அடுத்த மாதத்திலிருந்து எவ்வளவு சம்பளம் பெறுவார்கள் என்பது குறித்து இன்னும் குழப்பத்தில் உள்ளனர். 2020 ஜனவரி முதல் ஜூன் வரை டிஏவில் 3 சதவீதம் உயர்வு, ஜூலை முதல் டிசம்பர் 2020 வரை 4 சதவீதம் உயர்வு, ஜனவரி முதல் ஜூன் 2021 வரை 4 சதவீதம் அதிகரிப்பு உள்ளிட்ட மூன்று நிலுவையில் உள்ள டிஏ உயர்வுகளைச் சேர்த்த பிறகு 11% உயர்வு வந்துள்ளது.
தமிழகத்தில் பெட்ரோல், டீசல் மீதான வரி குறைப்பு? நிதியமைச்சர் விளக்கம்!
7 வது ஊதியக்குழுவில் மேட்ரிக்ஸின் படி மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் ரூ.18,000. தற்போதுள்ள ஊதிய மேட்ரிக்ஸில், மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தில் மாதத்திற்கு ரூ.2,700 நேரடியாக சேர்க்கப்படும். இந்த உயர்வு மூலம், ஊழியர்களின் மொத்த DA ஆண்டு அடிப்படையில் ரூ.32,400 அதிகரிக்கும்.
Fake unconformable news give google
Not benefits people and govt servant
உனக்கு வேற வேலையே இல்லையா
Enna da kanaku pannuringa athu eppadi 32400 varum ellarukum mela innum government sollave illa aana neengam mathum daily update pannuringa ungaluku news illa na veliya poi parunga
ஜிப்மரில் பணிபுரியும் தினக்கூலி ஊழியர்களுக்கு அந்த நிர்வாகம் சொல்லும் பதில் போல் உள்ளது ஏமாற்றுவார்கள்?