மத்திய அரசு ஊழியர்களுக்கு மேலும் 3% அகவிலைப்படி உயர்வு? DA விரைவில் அறிவிப்பு!
மத்திய அரசுத்துறைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு விரைவில் 3 சதவீத கூடுதல் அகவிலைப்படி (DA) உயர்வு அறிவிக்கப்பட உள்ளதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் மாத சம்பளம் அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
அகவிலைப்படி உயர்வு:
கொரோனா நோய்த்தொற்று காரணமாக ஏற்பட்ட பொருளாதார இழப்பினால் மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த அகவிலைப்படி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டது. அந்த தொகை கொரோனா தடுப்பு பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து மெல்ல இயல்பு நிலை திரும்பி வரும் நிலையில் 11% அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் வரவிருக்கும் பண்டிகைக் காலத்திற்கு சில நாட்கள் முன்னதாக, மத்திய அரசு ஊழியர்க மற்றும் ஓய்வூதியதாரர்கள் அகவிலைப்படி (டிஏ) மற்றும் டிஆர் ஆகியவற்றில் மற்றொரு உயர்வைப் பெற வாய்ப்புள்ளது.
1 முதல் 7ம் வகுப்பு வரை நவம்பர் மாதம் பள்ளிகள் திறப்பு – அரசு அதிரடி!!
ஏற்கனவே ஜூலை 2021 முதல் சம்பள உயர்வு பொருந்தும் வகையில் மத்திய அரசு 17% லிருந்து 28% ஆக உயர்த்தப்பட்டது. மேலும் மத்திய அரசு வீட்டு வாடகை கொடுப்பனவை (HRA) 24% லிருந்து 27% ஆக உயர்த்தியுள்ளது. தற்போது டிஏ மற்றும் டிஆரில் மேலும் 3% உயர்வை மத்திய அரசு விரைவில் அறிவிக்கலாம். இதனால் ஊக ஊதியத்துடன், டிஏ அடிப்படை சம்பளத்தில் 31% ஆக உயர்த்தப்படும் என கூறப்படுகிறது. அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் வெளியிடும் என்று ஊழியர் சங்கங்களும் எதிர்பார்க்கின்றன.
செப்.30 வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு, புதிய கட்டுப்பாடுகள் – மாநில அரசு அறிவிப்பு!
2021 ஆம் ஆண்டின் முதல் பாதியில் டிஏ உயர்வு செப்டம்பர் மாதத்தில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனை தொடர்ந்து அக்டோபர் மாத சம்பளத்துடன் அமலுக்கு வரலாம் என்று ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. எவ்வாறாயினும், செப்டம்பர் மாத சம்பளத்துடன் டிஏ உயர்வை அரசாங்கம் சேர்க்க வேண்டும் என்று ஊழியர் சங்கங்கள் கருதுவதாக தெரிவித்து உள்ளன.