வாழ்க்கை சான்றிதழை இன்னும் சமர்பிக்காதவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு – 3 மாத அவகாசம் நீட்டிப்பு!
மத்திய பாதுகாப்பு அமைச்சகம் இன்னும் வாழ்கை சான்றிதழை சமர்பிக்காத ஓய்வூதிய தாரர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும் வகையில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
கால நீட்டிப்பு:
மத்திய மற்றும் மாநில அரசுகளின் கீழ் பணியாற்றியவர்கள் பணி காலம் முடிந்து ஓய்வு பெட்ரா பின்னர், அவர்களின் பதவிக்கு என்று நிர்ணயிக்கப்பட்ட அளவின் படி ஓய்வூதியம் அளிக்கப்படுகிறது. இவ்வாறு ஓய்வூதியம் பெறுபவர்கள் தொடர்ந்து தாமதம் இன்றி பென்ஷன் தொகையை பெற வேண்டும் என்றால், ஆண்டுதோறும் நவம்பர் மாத இறுதிக்குள் தங்களின் வாழ்க்கை சான்றிதழை ( Life Certificate ) சமர்ப்பிக்க வேண்டும்.
பாரத் கவுரவ் ரயில்களின் கட்டணம் குறைவு – வெளியாக இருக்கும் சூப்பரான அறிவிப்பு!
Exams Daily Mobile App Download
அதன்படி, நடப்பு ஆண்டிற்கான வாழ்கை சான்றிதழ் பதிவேற்றம் குறித்த அறிவிப்புகள் முன்னதாக வெளியிடப்பட்டது. நவம்பர் 30ம் தேதியான இன்று தான் இதற்கான இறுதி நாள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் மத்திய பாதுகாப்பு அமைச்சகம் தற்போது வாழ்கை சான்றிதழை சமர்பிக்காதவர்களுக்கு 2023 பிப்ரவரி வரை கால அவகாசம் அளித்துள்ளது. இதை செய்ய தவறும் பட்சத்தில் உங்களுக்கான பென்சன் தொகை உங்களுக்கு நிறுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.