மத்திய அரசின் PM கிசான் திட்ட விவசாயிகளுக்கு ரூ.2000 – eKYC அப்டேட் செய்ய காலக்கெடு நீட்டிப்பு!
இந்தியாவில் விவசாயிகளுக்கான பிஎம் கிசான் திட்டம் மூலம் ரூ. 2000 நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த உதவித்தொகையை பெற E – KYC விவரங்களை புதுப்பிக்க வேண்டும். இதற்கு ஜூலை 31ஆம் தேதி வரை காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது.
பிஎம் கிசான் திட்டம்:
இந்தியாவில் ஏராளமானோர் வேளாண் தொழிலை நம்பியே இருக்கின்றனர். வேளாண் தொழிலையும் விவசாயிகளை காக்கும் பொருட்டு மத்திய மாநில அரசு புதிய நல திட்டங்களை அறிவித்து அதனை சிறப்பாக செயல்படுத்தியும் வருகிறது. அந்த வகையில் கடந்த 2020ம் ஆண்டு மத்திய அரசு 3 வேளாண் திட்டங்களை அறிமுகப்படுத்தியது. இதற்கு விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அறிவிக்கப்பட்ட புதிய திட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் நீண்ட கால போராட்டங்கள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து விவசாயிகள் வேளாண் இடு பொருட்களை வாங்கும் பொருட்டு கிசான் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
Exams Daily Mobile App Download
இதன் கீழ் தகுதி பெற்ற விவசாயிகளுக்கு ரூபாய் 2000 வீதம் ஆண்டுத்தோறும் 3 கட்டங்களாக ரூபாய் 6 ஆயிரம் நிதி உதவி அளிக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் 11 வது தவணையை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார். 10 கோடிக்கும் அதிகமான பயனாளிகள் இதன் மூலம் பயன் பெற்றனர். அவர்களின் வங்கி கணக்கில் ரூ.2000 வரவு வைக்கப்பட்டது. இதற்காக அரசு சுமார் ரூ.21,000 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. கிசான் திட்டத்தில் நிதி பெற E – KYC செயல்முறையை முடிக்க வேண்டியது அவசியமாகும்.
தமிழகத்திற்கு புதிய ஆபத்து, மீண்டும் ஊரடங்கு அமலாகிறதா? சுகாதாரத்துறை தகவல்!
இந்த eKYC நடைமுறையை செய்ய மத்திய அரசு காலக்கெடு வழங்கியது. மேலும் அதை நீட்டித்து வந்தது. eKYCக்கான கடைசி தேதியை மத்திய அரசு மீண்டும் நீட்டித்துள்ளது. அதன் படி இகேஒய்சி அப்டேட் செய்வதற்கான காலக்கெடு ஜூலை மாதம் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. pmkisan.nic.in என்ற இணையதளம் வாயிலாக பயனாளிகள் eKYC விவரங்களை புதுப்பிக்கலாம். டி இ கேஒய்சி அப்டேட் குறித்த சந்தேகங்களுக்கு 011-24300606,155261 என்ற ஹெல்ப்லைன் எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.