இந்தியாவில் 53,000 ஸ்டார்ட் அப்களுடன், 5.7 லட்ச வேலைவாய்ப்புகள் உருவாக்கம் – மத்திய அரசு!
இந்தியாவில் கிட்டத்தட்ட 53,000 Startup நிறுவனங்கள் செயல்பட்டு வருவதாகவும், அதன் மூலம் சுமார் 5.7 லட்சத்துக்கும் மேற்பட்ட புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளதாக மத்திய அரசு நாடாளுமன்ற அவையில் தெரிவித்துள்ளது.
வேலைவாய்ப்பு:
தற்பொழுது நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மகாராஷ்டிராவை சேர்ந்த பாஜக எம்.பியும், நிதி நிலைக்குழுவின் உறுப்பினரும் ஆன மனோஜ் கிஷோர்பாய் கோட்டக், கடந்த மூன்று ஆண்டுகளில் தொடக்க நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட நேரடி, மறைமுக வேலைவாய்ப்புகள் மற்றும் தொடக்கங்களை மேம்படுத்துவதற்கான அரசாங்கத்தின் திட்டம் குறித்து கேள்வி எழுப்பினார். இது தொடர்பாக வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் மாநில அமைச்சர் சோம் பிரகாஷ் பதிலளித்து பேசினார்.
தமிழகத்தில் நகைக்கடன் தள்ளுபடி – அமைச்சர் உறுதி!
அதில் இந்தியாவில் 52,391 நிறுவனங்கள் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான தொடக்க நிறுவனங்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. கடந்த 2021 ஜூலை 14 ஆம் தேதி நிலவரப்படி, தற்காலிக மதிப்பீடு ரூ.1.4 லட்சம் கோடியுடன் தற்போது 53 யூனிகார்ன்கள் உள்ளன. அதுவே 2021 ஜூலை 14 ஆம் தேதி நிலவரப்படி 50,000க்கும் மேற்பட்ட தொடக்க நிறுவனங்களால் 5.7 லட்சத்துக்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
அதாவது ஊதிய தொழில்முனைவோருக்கு ஆதரவளித்தல் மற்றும் வலுவான தொடக்க சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்கும் நோக்கத்துடன் கடந்த 2016 ல் ஸ்டார்ட்அப் முயற்சியை இந்தியா தொடங்கியது. மேலும் இந்த ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்காக ‘Startup India Seed Fund’ என்ற பெயரில் சுமார் ரூ.1,000 கோடி ஒதுக்குவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருந்தார். இந்தியாவில் தொடக்க நிறுவனங்களுக்கான வணிகத்தை எளிதாக்குவது, சீர்திருத்தங்களை செய்வதில் தொழில்நுட்பத்தின் பங்கு, பங்குதாரர்களின் திறன்களை உருவாக்குதல் போன்றவற்றை செயல்படுத்துவதற்கான திட்டங்களை அரசாங்கம் செயல்படுத்தி வருகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.