நாடு முழுவதும் மீண்டும் தீவிர ஊரடங்கு? மத்திய அரசு எச்சரிக்கை!
நாட்டில் கொரோனா பரவல் காரணமாக விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், அனைத்து சுற்றுலா தலங்களிலும் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளதால் மீண்டும் தீவிர ஊரடங்கு விதிக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது.
மத்திய அரசு எச்சரிக்கை:
நாடு முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலையின் தாக்கத்தின் காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் முதல் மாநில வாரியாக தீவிர ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. கட்டுப்பாடுகளின் விளைவினால் கடந்த சில வாரங்களாக நாட்டில் கொரோனா பாதிப்புகள் குறைந்து வருகிறது. இதனால் பல மாநிலங்களிலும் அரசுகள் தளர்வுகளை அளித்துள்ளது. நேற்று முதல் பல மாநிலங்களிலும் சுற்றுலா தலங்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் உள்ள மலைவாசல் தளங்களில் அதிக அளவிலான சுற்றுலா பயணிகள் செல்ல தொடங்கி உள்ளனர்.
தமிழகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு அரசுப்பணிகளில் 4 சதவீதம் இடஒதுக்கீடு – முதல்வர் உத்தரவு!
அதிலும், சிம்லா, குலு-மணாலி, தர்மஷாலா மற்றும் தமிழகத்தின் ஊட்டி, கொடைக்கானல் பகுதிகளிலும் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்து வருகின்றனர். இதனால், ஐ.சி.எம்.ஆரின் டி.ஜி. டாக்டர் பால்ராம் பார்கவா மற்றும் சுகாதார அமைச்சகத்தின் இணைச் செயலாளர் லாவ் அகர்வால் அவர்களும் மக்கள் கண்டிப்பாக கொரோனா நோய் தடுப்பு விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். இதனால் மத்திய அரசு இமாச்சலப் பிரதேச அரசுக்கு எச்சரிக்கும் வகையில் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
ஜூன் 2ம் வாரத்தில் இருந்து ஊரடங்கு கட்டுப்பாடுகளை இமாச்சலப் பிரதேச அரசு தளர்த்தியத்தில் இருந்து சிம்லா, குலு-மணாலி மற்றும் தர்மசாலா பகுதிகளுக்கு அதிக பயணிகள் வருகின்றனர். அதிக வாகனங்கள் வருவதால் ஆய்வு செய்ய முடியாமல் காவல்துறையினர் அனைவரையும் அனுமதிக்கும் நிலையில் உள்ளனர். இதனால், சிம்லா காவல்துறை கண்காணிப்பாளர் மோஹித் சாவ்லா, கொரோனா தடுப்பு விதிமுறைகளை கடைபிடிக்காதவர்கள் எட்டு நாள் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று அறிவித்துள்ளார்.
TN Job “FB Group” Join Now
முன்னதாக எஸ்பிஐ, கொரோனா இரண்டாம் அலை மே மாதத்தின் மூன்றாவது வாரத்தில் உச்சத்தில் இருக்கும் என்று எச்சரித்தது. அதேபோல், தொற்று மே 2ம் வாரத்தில் உச்சத்தை அடைந்தது. அதேபோல், தற்போது கொரோனா மூன்றாம் அலை ஆகஸ்ட் 2ம் வாரத்தில் நாட்டில் பரவ ஆரம்பித்து, செப்டம்பர் மாதம் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்று தற்போது எச்சரித்துள்ளது. இதனால் மத்திய அரசு, மக்கள் நோய் தடுப்பு கட்டுப்பாடுகளை முறையாக பின்பற்றாவிட்டால் நாடு முழுவதும் மீண்டும் தீவிர ஊரடங்கு அறிவிக்கும் நிலை வரலாம் என்று எச்சரித்துள்ளது.