மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியில் 32% உயர்வு – அரசு ஆலோசனை!!
கொரோனா பெருந்தொற்றால் மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி உயர்வு கடந்த ஆண்டு நிறுத்தப்பட்டிருந்தது. அதனடிப்படையில் மத்திய அரசு அகவிலைப்படியை 32 சதவீதமாக உயர்த்தவுள்ளதாக கூறப்படுகிறது.
அகவிலைப்படி உயர்வு:
கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கி வந்த அகவிலைப்படி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த அகவிலைப்படியை ஒவ்வொரு 6 மாதத்திற்கும் உயர்த்தி வருவது வழக்கமாக இருந்தது. அதன்படி கடந்த 2020ஆம் ஆண்டிற்கான இரண்டு அகவிலைப்படி உயர்வு மற்றும் 2021ஆம் ஆண்டிற்கான அகவிலைப்படி உயர்வு மீது இருந்த தடையை நீக்குவது குறித்து மத்திய அரசு ஆலோசனை செய்து வருகிறது.
இந்த DA மீதான தடை நீக்கப்பட்டால், மத்திய அரசு ஊழியர்களுக்கு 32 சதவீதம் அகவிலைப்படி கிடைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 2019 ஆம் ஆண்டில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 17 சதவீதமாக இருந்த DA, 2020 ஜனவரியில் 3 சதவீதம் உயர்த்தப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ள DA தடையால், ஜனவரி மற்றும் ஜூலை மாதத்தில் உயர்த்தப்பட வேண்டிய அகவிலைப்படி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் – நாளை முக்கிய அறிவிப்பு!!
இதன்படி 2019ல் 17 சதவீதமாக இருந்த அகவிலைப்படி 28 சதவீதமாக உயர வாய்ப்புள்ளது. இதனால் மத்திய அரசு ஊழியர்களுக்கு கிடைக்க வேண்டிய அகவிலைப்படி 32 சதவீதமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா பெருந்தொற்றால் மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய அகவிலைப்படி நிறுத்தப்பட்டிருப்பதால், மாநில அரசும் தங்களது ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வை நிறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்