மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் தொடக்கம்? – மத்திய அரசு பதில்!
மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை தொடர்பாக சமூக ஆர்வலர் ஒருவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வாயிலாக கேள்வி கேட்டிருந்தார். மத்திய அரசு இதற்கு தற்போது பதில் அளித்துள்ளது.
மதுரை எய்ம்ஸ்:
தமிழகத்தில் மதுரை தோப்பூர் பகுதியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என கடந்த 2015ம் ஆண்டு மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. பிறகு 2019 ம் ஆண்டு ரூ.15 கோடி செலவில் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டது. இதற்காக தமிழக அரசு சார்பில் மதுரை தோப்பூரில் 224.24 ஏக்கர் நிலம் எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தை சார்ந்த சமூக ஆர்வலர் பாண்டியராஜா என்பவர் மதுரை எய்ம்ஸ் டெண்டர் , மருத்துவ மாணவர் சேர்க்கை மற்றும் கட்டுமான பணிகள் சம்பந்தமாக பல்வேறு தகவல்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் மத்திய அரசிடம் கேட்டிருந்தார்.
மாநில வாரியாக பள்ளிகள் மீண்டும் திறப்பு – முழு விவரங்கள்!
முன்னதாக மதுரை எய்ம்ஸ் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் நடந்து வருகிறது. இந்நிலையில், தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய அரசு அளித்துள்ள பதில் அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம், திட்ட மேலாண்மை நிறுவனத்தை இறுதி செய்வதற்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. மேலும், மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் எப்போது தொடங்கும் என்று தெரியவில்லை.
TN Job “FB Group” Join Now
மதுரை எய்ம்ஸ் கட்டி முடிப்பதற்கான திருத்தப்பட்ட இலக்கு நிறைவு தேதிக்கு இன்னும் ஒப்புதல் வழங்கப்படவில்லை. இந்நிலையில், மேலும், 150 படுக்கைகள் கொண்ட தொற்று நோய் பிரிவு ஒன்றையும் மற்றும் சில சேவைகளையும் மதுரை எய்ம்ஸ் திட்டத்தில் இணைக்கப்பட இருக்கிறது. புதிய திருத்தப்பட்ட திட்ட மதிப்பீடு ரூ 1977.80 கோடிகள் எனவும் அதில் ரூ 1627.70 கோடிகள் ‘ஜெய்கா’ கடன் வாயிலாகவும் மீதம் பட்ஜெட் ஒதுக்கீடு செய்யப்படும். விரிவான திட்ட மதிப்பீடு பற்றிய தகவல்களும் இல்லை. மாணவர் சேர்க்கை பற்றி மாநில அரசு பரிசீலித்து வருகிறது என்று மத்திய அரசு தனது பதிலில் தெரிவித்துள்ளது.