மத்திய அரசின் PM கிசான் கடன் அட்டை & பயிர் காப்பீட்டுத் திட்டம் – முழு விபரங்கள் இதோ!
இந்திய நாட்டில் விவசாயிகளே முதுகெலும்பாக விளங்குகின்றனர். அண்மை காலமாக விவசாயிகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டு வருகிறது. இவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக மத்திய அரசு பல்வேறு வகையான நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போது கிசான் கடன் அட்டை & பயிர் காப்பீட்டுத் திட்டம் குறித்த விவரங்களை பார்ப்போம்.
விவசாயிகளுக்கான திட்டம்
இந்திய நாட்டில் தற்போது வேளாண் தொழில் செய்பவர்கள் குறைவாக உள்ளனர். அதனால் விவசாயிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பல்வேறு வகையான நலத்திட்டங்களை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி தற்போது மத்திய அரசின் கிசான் உதவித்தொகை திட்டம், கிசான் கடன் அட்டை & பயிர் காப்பீட்டுத் திட்டம் உள்ளிட்டவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள காமாட்சிபுரம் கிராமத்தில் அமைந்துள்ள கிரிஷி விக்யான் கேந்திரா சார்பில் 75 வது ஆண்டு சுதந்திர பெருவிழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மாவட்ட முன்னோடி வங்கியின் மேலாளர் அகிலன் விவசாயிகளுக்கு வங்கிகள் மூலம் செயல்படுத்தப்படும் வேளாண் திட்டங்கள் குறித்து விரிவாகக் கூறியுள்ளார்.
Exams Daily Mobile App Download
தற்போது வேளாண் திட்டங்களை பற்றி அவர் கூறியதை பற்றி பார்ப்போம். இதில் முதலாவதாக கிசான் உதவித்தொகை திட்டத்தில் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 3 தவணையாக ரூ.2000 வீதம் என மொத்தமாக ரூ.6000 வரை வழங்கப்படுகிறது என்று கூறினார். இப்போது 10 தவணை வழங்கப்பட்டுள்ள நிலையில் 11வது தவணை தொகை வழங்கப்படுவதற்கான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த உதவித்தொகை மூலமாக விவசாயிகள் தங்களுக்கு தேவையான வேளாண் பொருட்கள் மற்றும் இடுபொருட்கள் உள்ளிட்டவை வாங்கி வருகின்றனர்.
தினசரி காலை 6 மணிமுதல் 10.30 மணிவரை பள்ளிகள் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!
இதே போன்று கிசான் கடன் அட்டையின் 1.60 லட்சம் முதல் மூன்று லட்சம் வரை கடனாக பெற்று விவசாயம் செய்வதற்கு தேவையான விதைகள், உரங்கள், பூச்சி மருந்துகள் உள்ளிட்டவை வாங்க முடியும். அத்துடன் இதில் சரியாக கடன் செலுத்துபவர்களுக்கு 2% மற்றும் 3% வட்டி ஊக்கத்தொகை விதிகளுக்கு உட்பட்டு வழங்கப்படும். மேலும் பேரிடர் காலங்களில் விவசாயிகள் தங்களின் பயிர் பாதுகாக்க பயிர் காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்றும் தெரிவித்தார். மேலும் இதுவரை விவசாய கடன் அட்டைகள் பெறாதவர்கள் தங்களது நில உரிமை ஆவணங்கள், பான் கார்டு நகல், வங்கி கணக்கு புத்தகம், ஆதார் அட்டை நகல் உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பித்து கடன் அட்டை பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.