மத்திய அரசின் PM KISAN 11வது தவணைத்தொகை ரூ.2000 – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

0
மத்திய அரசின் PM KISAN 11வது தவணைத்தொகை ரூ.2000 - முக்கிய அறிவிப்பு வெளியீடு!
மத்திய அரசின் PM KISAN 11வது தவணைத்தொகை ரூ.2000 - முக்கிய அறிவிப்பு வெளியீடு!
மத்திய அரசின் PM KISAN 11வது தவணைத்தொகை ரூ.2000 – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

பிரதமர் கிசான் சம்மன் நிதியின் 12 கோடிக்கும் அதிகமான பயனாளிகள் ஏப்ரல்-ஜூலை 2022 அல்லது 11வது தவணைக்காக காத்திருக்கின்றனர். அவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக கிசான் நிதியுதவி திட்டத்தின் 11-வது தவணை குறித்த முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

முக்கிய அறிவிப்பு:

இந்தியாவில் உள்ள சிறு, குறு விவசாயிகளுக்கு உதவும் வகையில் பிரதமரின் விவசாயிகள் நிதி உதவித் திட்டம் 2019ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின்படி, 4 மாதங்களுக்கு ஒருமுறை 2 ஆயிரம் ரூபாய் என ஆண்டுக்கு 6 ஆயிரம் விவசாயிகளுக்கு நிதியுதவி அளிக்கப்படுகிறது. நாடு முழுவதும் உள்ள கோடிக் கணக்கான விவசாயிகள் மத்திய மோடி அரசின் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதிதிட்டத்தின் கீழ் பயன் பெற்று வருகின்றனர். இந்நிலையில் ஆதார் அடிப்படையிலான ஒடிபி முறைக்கு உழவர் இ-கேஒய்சி விருப்பத்தைக் கிளிக் செய்ய இதனை அப்டேட் செய்யலாம். பிஎம் கிசான் திட்டத்தில் விவசாயிகள் தவணைத் தொகையை பெற eKYC அப்டேட்டை செய்யாவிட்டால் அடுத்த தவணை தொகை கிடைப்பதில் சிக்கல் ஏற்படலாம் என்று கூறப்பட்டது.

BECIL நிறுவனத்தில் பணிவாய்ப்பு – 10ம் வகுப்பு முடித்தால் விண்ணப்பிக்கலாம் || ரூ.33,450/- ஊதியம்..!

 

eKYC செயல்முறைக்கு மார்ச் 31 2022 ஆம் தேதி இறுதி காலக்கெடுவாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது மகிழ்ச்சியான செய்தியாக இந்த eKYC செயல்முறை முடிப்பதற்கான காலகெடு மே 22, 2022 வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த திட்டத்தின் கீழ் இதுவரையில் 10 தவணைகள் வழங்கப்பட்டுவிட்ட நிலையில், 11வது தவணைக்காக விவசாயிகள் காத்திருக்கின்றனர். ஆனால் நிறையப் பேர் இன்னும் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யாமல் உள்ளனர். எனவே eKYC செயல்முறையை இதுவரை முடிக்காதவர்களுக்கும் 11-வது தவணை தொகை கிடைக்கவுள்ளது. இருப்பினும் eKYC செயல்முறையை முடிப்பது கட்டாயமாகும்.

1. PM கிசானின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின் https://pmkisan.gov.in/அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிட வேண்டும்.

2.முகப்புப் பக்கத்தில், வலது பக்கத்தில் இருக்கும் eKYC விருப்பத்தைக் கிளிக் செய்ய வேண்டும்.

3. உங்கள் ஆதார் அட்டை எண், கேப்ட்சா குறியீட்டை உள்ளிட்டு தேடலை கிளிக் செய்ய வேண்டும்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு 34% அகவிலைப்படி (DA) உயர்வு – கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய விவரங்கள்!

4.உங்கள் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ள உங்கள் மொபைல் எண்ணை உள்ளிடவும்.

5.உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு அனுப்பப்பட்ட OTP ஐ உள்ளிடவும். eKYC சரியாக முடிக்க உங்கள் எல்லா விவரங்களும் பொருந்த வேண்டும். இல்லையெனில், உள்ளூர் ஆதார் சேவை மையத்திற்கு செல்ல வேண்டும்.

உங்கள் கணக்கு செயலில் உள்ளதா என்பதை தெரிந்துக் கொள்வது எப்படி:

1.முதலில் PM Kisan இன் அதிகாரப்பூர்வ இணையதளமான https://pmkisan.gov.in/ க்குச் செல்லவும்.வலது பக்கத்தில் ‘ஃபார்மர்ஸ் கார்னர்’ என்ற ஆப்ஷனைப் பெறுவீர்கள்

‘2.’பயனாளி நிலை’ என்ற விருப்பத்தை கிளிக் செய்யவும். இங்கே ஒரு புதிய பக்கம் திறக்கும்.புதிய பக்கத்தில், ஆதார் எண் அல்லது வங்கி கணக்கு எண் என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

3.இந்த எண்கள் மூலம், உங்கள் கணக்கில் பணம் வந்துள்ளதா இல்லையா என்பதை சரிபார்க்கவும்.

4.நீங்கள் தேர்ந்தெடுத்த விருப்பத்தின் எண்ணை உள்ளிடவும். பின்னர் ‘Get Data’ என்பதைக் கிளிக் செய்யவும்.

5.இங்கே கிளிக் செய்த பிறகு, அனைத்து பரிவர்த்தனை தகவல்களையும் பெறுவீர்கள். அதாவது, உங்கள் கணக்கில் தவணை எப்போது வந்தது, எந்த வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது.

6. 11வது தவணை தொடர்பான தகவல்களையும் இங்கே பெற முடியும். ‘FTO உருவாக்கப்பட்டுள்ளது மற்றும் கட்டண உறுதிப்படுத்தல் நிலுவையில் உள்ளது’ என நீங்கள் பார்த்தால், நிதி பரிமாற்ற செயல்முறை தொடங்கிவிட்டது என்று அர்த்தம். இந்த தவணை சில நாட்களில் உங்கள் கணக்கிற்கு மாற்றப்படும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!