இனி ரேஷன் கடைகள் மகளிர் குழுக்களின் கைகளில்? மத்திய அரசின் புதிய திட்டம்!!
நாடு முழுவதும் 5 லட்சத்திற்கும் அதிகமான ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட கடைகள் தனியார் டீலர்களால் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது இதனை மகளிர் குழுக்களிடம் ஒப்படைக்க உள்ளதாக மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
மகளிர் சுய உதவி குழு
நாடு முழுவதும் சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இதில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் தனியார் டீலர்களைக் கொண்டு நடத்தப்படுகிறது. இதேபோல் கூட்டுறவு துறையின் கீழ் 82 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரேஷன் கடைகளும், மகளிர் சுய உதவி குழுக்களின் கீழ் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரேஷன் கடைகளும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரசு அறிவித்துள்ள சூப்பர் திட்டம் – இனி யாரும் ஏமாற வேண்டாம்!
தற்போது தனியார் டீலர்களுக்கு ஒரு குவிண்டால் உணவுப் பொருளுக்கு 140 ரூபாய் கமிஷன் மத்திய அரசால் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் மற்ற மாநிலங்களில் ரூ.90 மட்டுமே வழங்கப்படுகிறது. அதனால் இந்த செலவீனத்தை குறைக்கும் வகையில் மத்திய அரசு மாநில உணவுத்துறை செயலாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டது. இந்த கூட்டத்தில் தனியார் டீலர்களிடம் உள்ள ரேஷன் கடைகளை மகளிர் சுய உதவி குழுக்கள் அல்லது கிராம பஞ்சாயத்துகளிடம் ஒப்படைக்க உள்ளதாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
Follow our Twitter Page for More Latest News Updates
மேலும் மகளிர் சுய உதவி குழுக்களின் நிதிநிலை மேம்படுத்துவதற்காகவும் இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அத்துடன் ரேஷன் கடைகளை பொது சேவை மையங்களாக மாற்ற திட்டமிட்டு வருகிறது. இதற்காக தமிழகத்தில் 1480 ரேஷன் கடைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் ரேஷன் கடைகளில் முன்னணி நிறுவனங்களின் வீட்டு உபயோகப் பொருட்களும் விற்பனை செய்யப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இத்திட்டத்தை மத்திய அரசு விரைவில் செயல்படுத்த உள்ளது.