மத்திய அரசின் அருமையான ஓய்வூதிய திட்டம் – ரூ.1000 முதல் ரூ.5000 வரை பெறலாம்!
இந்திய அரசு அடல் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.1000 முதல் ரூ.5000 வரை பென்ஷன் வழங்கும் அருமையான பென்ஷன் திட்டம் குறித்த அறிவிப்பை மத்திய அரசு அறிவித்திருக்கிறது.
ஓய்வூதிய திட்டம்
இந்தியாவில் கடந்த 2015 ஆம் ஆண்டு அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தின் மூலமாக ரூ.1000 முதல் ரூ.5000 வரை பென்ஷன் வழங்கும் திட்டம் நரேந்திர மோடி அவர்களால் உருவாக்கம் செய்யப்பட்டது. கிட்டத்தட்ட 5 கோடிக்கும் அதிகமான ஓய்வூதியதாரர்கள் இந்த திட்டத்தின் மூலமாக பயன்பெற்று வருகின்றனர். அதாவது, குறிப்பிட்ட சில விதிமுறைகளின் அடிப்படையில் இந்திய அரசு அடல் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஓய்வூதியதாரர்களுக்கு பென்ஷன் வழங்கப்பட்டு வருகிறது.
பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாமல் ரூ.16,000/- சம்பளத்தில் வேலை!
அதாவது, எந்தவொரு சமூக பாதுகாப்பு நலத்திட்டங்களில் பங்கு பெறாத மற்றும் வருமான வரி செலுத்தாத ஓய்வூதியதாரர்களுக்கு மட்டுமே இந்த திட்டத்தின் படி பலன் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், 60 வயது பூர்த்தியடைந்த ஓய்வூதியதாரர்களுக்கு 100% ஓய்வூதியத்திற்கான பலன் கிடைக்கும் எனவும், 60 வயதிற்கு முன்பாக இந்த அடல் பென்ஷன் திட்டத்திலிருந்து வெளியேற முடியாது எனவும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. மேலும், ஓய்வூதியதாரர் 60 வயதிற்கு முன்பாகவே இறக்கும் பட்சத்தில் பென்ஷன் தொகை அவரது மனைவி அல்லது குடும்பத்தில் உள்ள சந்தாதாரருக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.