மத்திய அரசு அதிகாரிகளுக்கு முக்கிய அறிவிப்பு – பணிக்கு வர உத்தரவு!
மத்திய அரசு அலுவலகங்களில் பணி புரிந்து வரும் சார்பு செயலர் மற்றும் உயரிய பதவிகளில் உள்ள அதிகாரிகள் அனைவரும் நாளை (ஜூன் 16) முதல் அனைத்து வேலை நாட்களிலும் அலுவலகம் வந்து பணியாற்ற வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.
அலுவலக பணி
கொரோனா 2 ஆம் அலை காரணமாக அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன. தற்போது மாநிலங்கள் தோறும் கொரோனா பாதிப்பு விகிதம் குறைந்து வரும் காரணத்தால் அரசு ஊழியர்களை மீண்டும் பணிக்கு வர அழைப்புகள் விடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மத்திய அரசு அலுவலகங்களில் பணியாற்றும் சார்பு செயலர், அதற்கு மேற்பட்ட பதவிகளில் இருக்கும் அனைவரும் நாளை (ஜூன் 16) முதல் பணிக்கு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல் – பள்ளி, கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தீவிரம்!
இது தொடர்பாக மத்திய அரசு பணியாளர்கள் நலத்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மத்திய அரசு அலுவலகங்களில் பணியாற்றும் சார்பு செயலர் பதவிக்கு கீழ் உள்ள 50% பணியாளர்கள் நாளை (ஜூன் 16) முதல், அனைத்து வேலை நாட்களிலும் அலுவலகம் வந்து பணியாற்ற வேண்டும். மேலும் சார்புச் செயலர் மற்றும் அதற்கு மேற்பட்ட பதவிகளில் உள்ள அதிகாரிகள் நாளை முதல் அனைத்து வேலை நாட்களிலும் அலுவலகம் வர வேண்டும்.
அரசு அலுவலகங்கள் 3 நேரங்களாக பிரித்து செயல்படும். மேலும் அலுவலகம் வரும் ஊழியர்கள் அனைவரும் கைகளை கழுவுதல், முகக்கவசம், தனி மனித இடைவெளி ஆகிய கட்டுப்பாடுகளை முறையாக பின்பற்ற வேண்டும். அதே நேரத்தில் மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகள் அலுவலகம் வர தேவையில்லை. கட்டுப்பாட்டு மண்டலங்களில் இருந்து பணிக்கு வருபவர்களுக்கு அலுவலகம் வர விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
மேலும் வீட்டிலிருந்து பணியாற்றுபவர்கள், தொலைபேசி அல்லது மற்ற மின்னணு சாதனங்கள் வாயிலாக எந்த நேரத்திலும் தொடர்பு கொள்ளும் வகையில் இருக்க வேண்டும். அலுவலகங்களில் நடைபெறும் அனைத்து கூட்டங்களும் வீடியோ கான்பரன்ஸ் வழியாக மட்டும் நடத்தப்பட வேண்டும். முக்கிய கூட்டங்கள் மட்டும் நேரடியாக நடத்திக்கொள்ளலாம். அலுவலக ரீதியாக வெளி ஆட்களை நேரடியாக சந்திப்பதை தவிர்க்க வேண்டும். இந்த உத்தரவுகள் அனைத்தும் நாளை (ஜூன் 16) முதல் நடைமுறைக்கு வரும்’ என கூறப்பட்டுள்ளது.