WhatsApp புதிய தனியுரிமை கொள்கை – மத்திய அரசு நோட்டீஸ்!!
WhatsApp தனது புதிய தனியுரிமை கொள்கையை கட்டாயம் வாபஸ் பெற வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. பயனர்களின் தகவல் பாதுகாப்பு காரணமாக வாட்ஸ்ஆப் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மத்திய அரசு நோட்டீஸ்:
மக்கள் அதிகம் பயன்படுத்தும் ஒரு தகவல் பரிமாற்றம் செய்ய உதவும் செயலியான WhatsApp தனது வாடிக்கையாளர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அந்த அறிவிப்பின் படி WhatsApp இன் புதிய தனியுரிமை கொள்கையை பயனாளர்கள் கட்டாயம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அந்த புதிய தனியுரிமை கொள்கையில் பயனர்களின் தரவுகளை வணிக ரீதியாக விற்பனை செய்யலாம் என தெரிவிக்கப்பட்டது.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் இதற்கு பல தரப்பில் இருந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் மத்திய தகவல் தொழிநுட்பம் சார்பில் WhatsApp நிறுவனத்திற்கு தற்போது ஒரு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி, பயனர்களின் தகவல் பாதிப்பு ஏற்படும் வகையில் இந்த புதிய தனியுரிமை கொள்கை உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவிற்கு புதிய மருந்து 2DG – ஜூன் மத்தியில் விற்பனை!
மேலும் நியாயமற்ற விதிமுறைகளையும், நிபந்தனைகளையும் இந்திய பயனர்கள் மீது சுமத்துவது சிக்கல் மட்டுமல்லாமல் பொறுப்பற்ற தன்மையாக உள்ளது. மேலும் இந்த நோட்டீஸ்க்கு வருகிற மே 25 ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு தெரிவிக்கவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவில் சுமார் 40 கோடிக்கு அதிகமானோர் வாட்ஸ்ஆப் பயன்படுத்துகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.