இந்தியாவில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா பரவல் – மத்திய அரசு ஷாக் அறிவிப்பு!
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருப்பதால் மீண்டும் 2 ஆயிரத்தை தொட்டு விட்டது. மேலும் இந்த நிலையில் நேற்றைய பாதிப்பைக்காட்டிலும் 90 சதவீதம் அதிகம் என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
கொரோனா பாதிப்பு:
உலகில் உள்ள நாடுகள் அனைத்திலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று அதிகமாக பரவி வருகிறது. இந்த தொற்று பிறந்த நாடு சீனாவில் உள்ள வூகான் பகுதியில், கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில், கோவிட் – 19 என்று அழைக்கப்படும் கொரோனா தொற்று மிகவும் மோசமான நிலையில் பரவியது. இந்நிலையில் தற்போது தான் சீனா ஊரடங்கில் இருந்து வெளிவந்து இயல்பு நிலைக்கு திரும்பியது. தற்போது கொரோனா தொற்று மீண்டும் அதிகமாகி விட்டதால் சீனா மீண்டும் லாக்டவுனைக் கொண்டு வந்துள்ளது. வீடு வீடாக சென்று டெஸ்ட் போன்ற பல நடவடிக்கைகளை செய்து வருகிறது.
TN TET தேர்விற்கு விண்ணப்பிக்க மீண்டும் கால அவகாசம் நீட்டிப்பு – வலுக்கும் கோரிக்கை!
இந்த நிலையில் தற்போது இந்தியாவில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் புள்ளி விவரங்கள்படி, நாடு முழுவதும் ஒரே நாளில் மட்டும் 2,183 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இது தவிர நேற்றைய கொரோனா பாதிப்பை காட்டிலும் இது 90 சதவீதம் அதிகமாகும். ஒட்டுமொத்தமாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு 4,30,44,280 ஆக உயர்ந்துள்ளது என்றும் கூறியுள்ளனர்.
இந்த நிலையில் தற்போது தலைநகர் டெல்லியில் பாதிப்பு அதிகமாகி உள்ளது. மேலும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவது குறித்து நாளை மறுநாள் துணை நிலை ஆளுநர் அனில் பைஜால் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. மேலும் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் சார்பில் மாநிலங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.