தமிழகத்தில் ‘ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம்’ செயல்பாடு – மத்திய அரசு அறிவுறுத்தல்!!
மத்திய அரசின் பிரதமர் கரீப் கல்யாண் அன்னயோஜனா மற்றும் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்ட செயல்பாடுகள் தமிழகத்தில் திருப்திகரமாக இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஒரே நாடு ஒரே ரேஷன்:
மத்திய அரசு ஏழை எளிய மக்கள் பயனடையும் வகையில், பிரதமர் கரீப் கல்யாண் அன்னயோஜனா மற்றும் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த கொரோனா காலத்தில் மாநில அரசுகள் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பயனடையும் மக்களில், அதிகம் பாதிக்கப்படக் கூடியவர்களும், பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினரும் பயனடைவதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
TN Job “FB Group” Join Now
இந்த திட்டத்தின் மூலம் நகர மற்றும் ஊரகப்பகுதிகளில் வாழும், பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மக்களுக்கு ரேஷன் அட்டைகளை வழங்க சிறப்பு திட்டத்தை மேற்கொள்ளும்படி அனைத்து மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய உணவு மற்றும் பொது விநியோகத்துறை உத்தரவிட்டுள்ளது. தெருக்களில் வசிப்பவர்கள், குப்பைகளை சேகரிப்பவர்கள், தெருத்தெருவாக சென்று பொருட்களை விற்பவர்கள், சைக்கிள் ரிக்ஷா இழுப்பவர்கள் போன்றவர்கள் இந்த திட்டத்தின் மூலமாக பயனடைவார்கள்.
தேசிய அளவில் தமிழகம் 2வது இடம் – நிதி ஆயோக் தரவரிசை பட்டியல் வெளியீடு!
ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் 32 மாநிலங்களில் செயல்படுத்தப்படுகிறது. இதன மூலம் மாதம் ஒன்றுக்கு இந்தியா முழுவதும் 1.35 கோடி மக்கள் பயன்பெறுவார்கள். பீகார், ராஜஸ்தான், ஆந்திரா, தெலுங்கானா, உத்தரபிரதேசம், கேரளா, கர்நாடகா, அாியானா, மராட்டியம், மத்திய பிரதேசம், பஞ்சாப் போன்ற மாநிலங்களில் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் தமிழகத்தில் இந்த திட்ட செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை, இதனை சரியான முறையில் செயல்படுத்த வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது.