இரண்டாம் டோஸ் தடுப்பூசி போடுபவர்களுக்கு முன்னுரிமை – மத்திய அரசு வலியுறுத்தல்!!
நாடு முழுவதும் தற்போது மூன்றாம் கட்ட தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன்படி முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்பவர்களை விட இரண்டாம் தவணை தடுப்பூசி போடுபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கவேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசி
இந்தியாவில் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகள் கொரோனா அவசரகால பயன்பாட்டில் இருந்து வருகின்றன. மத்திய அரசு அனுமதி பெற்ற பிறகு மாநிலங்கள் தோறும் பொதுமக்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. முன்னதாக கொரோனா முன்கள பணியாளர்கள், சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. தொடர்ந்து இரண்டாம் கட்ட கொரோனா தடுப்பூசிகள் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள், இணை நோய் உள்ளவர்களுக்கு செலுத்தப்பட்டது.
பேஸ்புக் பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு – புதிய வசதி அறிமுகம்!!
மே 1 ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதனால் தேவையான தடுப்பூசி மருந்துகளை தயாரிக்கும் படி மருந்து நிறுவனங்களுக்கு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. இந்நிலையில் கொரோனா தடுப்பூசியின் இரண்டாம் தவணை செலுத்த வருபவர்களுக்கு முன்னுரிமை அளிக்குமாறு மத்திய அரசு உத்தரவிட்டுதுள்ளது.
TN Job “FB Group” Join Now
இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மாநில அரசுகளுக்கு கூறுகையில், ‘அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தடுப்பூசியின் இரண்டாம் தவணை செலுத்திக்கொள்ள வருபவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். இரண்டாம் தவணை தடுப்பூசிக்காக அதிகமானவர்கள் காத்திருப்பதால் இத்தகைய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு மாநிலங்களுக்கு வழங்கப்படும் தடுப்பூசிகளில் 70% தடுப்பூசி இரண்டாம் தவணை செலுத்த வருபவர்களுக்கு போட வேண்டும். மீதமுள்ள 30% தடுப்பு மருந்துகளை முதல் தவணையாக செலுத்த வேண்டும்’ என கூறியுள்ளார்.