இந்தியாவில் 5ஜி சேவையை அதிகரிக்க மத்திய அரசு வைத்த ட்விஸ்ட் – 4ஜி போன்களை விற்க தடை!
இந்தியாவில் அதிவேக நெட்ஒர்க்கான 5ஜி சேவையை பிரதமர் மோடி கடந்த அக். 1 ஆம் தேதி தொடங்கி வைத்தார். இந்நிலையில் 5ஜி சேவையை அதிகரிக்கும் நோக்கில் இனி ரூ. 10000க்கு மேல் உள்ள 4ஜி போன்களை விற்க வேண்டாம் என தொலைத்தொடர்பு துறையும், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகமும் மொபைல் போன் நிறுவனங்களிடம் தெரிவித்துள்ளது.
5ஜி சேவை:
நாடு முழுவதும் மொத்தமாக 750 மில்லியன் மக்கள் ஆண்ட்ராய்டு மொபைல் போன்களை பயன்படுத்தி வருகின்றனர். அதில் சுமார் 350 மில்லியன் மக்கள் 3ஜி மற்றும் 4ஜி சேவைகளை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் அதிவேக இணையதள சேவையான 5ஜி சேவையை பிரதமர் மோடி கடந்த அக். 1 ஆம் தேதி 6வது இந்திய கைபேசி மாநாட்டில் துவக்கி வைத்தார். அதன் பின் ஜியோ மாற்று ஏர்டெல் நிறுவனங்கள் ஒரு சில நகரங்களில் 5ஜி சேவையை வழங்க தொடங்கி இருக்கிறது.
இந்நிலையில் மொபைல் நிறுவனங்களிடம் தொலைத்தொடர்பு துறையும், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகமும் பேசுகையில், இந்தியாவில் ரூ.10,000-க்கு மேல் விலையுள்ள 4ஜி போன்களை விற்பனை செய்ய வேண்டாம் என தெரிவித்துள்ளது. மேலும் இந்தியாவில் முற்றிலுமாக 5ஜி மொபைல் போன்கள் பயன்பாட்டிற்கு வர வேண்டும் என தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் அடுத்த மூன்று மாதங்களில் 5ஜி ஸ்மார்ட்போன்களில் 5ஜி சேவைக்கான சப்போர்ட் கிடைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெருங்கும் தீபாவளி: ராக்கெட் வேகத்தில் குறையும் தங்கம் விலை – உற்சாகத்தில் மக்கள்!
Exams Daily Mobile App Download
இந்தியாவில் தற்போது பயன்பாட்டில் உள்ள சாம்சங், ஆப்பிள் போன்ற முன்னணி நிறுவனங்களின் 5ஜி சாதனங்களில் 5ஜி சேவைக்கான சப்போர்ட் கிடைக்காமல் இருப்பதால் தற்போது இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. நாடு முழவதும் 2024 ஆம் ஆண்டிற்குள் அனைவருக்கும் 5ஜி சேவை கிடைக்கும் என ஜியோவின் தலைவர் தெரிவித்துள்ளார். தற்போது நிலவரப்படி 100 மில்லியன் பயனர்கள் 5ஜி போன்களை பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்