5 மாநிலங்களுக்கு மத்திய அரசின் முக்கிய அறிவுறுத்தல் – கொரோனா பரவல் எதிரொலி!

0
5 மாநிலங்களுக்கு மத்திய அரசின் முக்கிய அறிவுறுத்தல் - கொரோனா பரவல் எதிரொலி!
5 மாநிலங்களுக்கு மத்திய அரசின் முக்கிய அறிவுறுத்தல் - கொரோனா பரவல் எதிரொலி!
5 மாநிலங்களுக்கு மத்திய அரசின் முக்கிய அறிவுறுத்தல் – கொரோனா பரவல் எதிரொலி!

இந்தியாவில் தற்போது பல மாநிலங்களில் மீண்டும் கொரோனா பரவலின் தாக்கம் மீண்டும் வேகமெடுக்க தொடங்கியுள்ளது.  அதனால் தொற்று வேகமெடுத்துள்ள தமிழகம், கேரளா, மகாராஷ்டிரா, தெலுங்கானா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட 5 மாநிலங்களில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மத்திய அமைச்சர் கடிதம் எழுதியுள்ளார்.

கொரோனா பரவல்

இந்தியாவில் கொரோனா பரவலின் 3ம் அலையின் தாக்கம் குறைந்துள்ளதை தொடர்ந்து அனைத்து கட்டுப்பாடுகளையும் திரும்ப பெறுவதாக கடந்த மார்ச் மாதத்தில் அறிவிப்பை அரசு வெளியிட்டது.  இதையடுத்து தற்போது அனைத்து தொழிற்துறைகளும், வணிக நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளன.  இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  அதனால் தொற்று பரவலை கட்டுப்படுத்த கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

Exams Daily Mobile App Download

இதனை தொடர்ந்து தற்போது தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா, தெலுங்கானா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட 5 மாநிலங்களில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதனால் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.  அத்துடன் முகக்கவசமின்றி இருப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  இதையடுத்து தொற்று அதிகம் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதியுள்ளார்.

தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பரவல் – ஊரடங்கு அமல்? பொதுமக்கள் அச்சம்!

அத்துடன் இந்த 5 மாநிலங்களிலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், கண்காணிப்பையும் தீவிரப்படுத்த வேண்டும் என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.  இதனை தொடர்ந்து தடுப்பூசி செலுத்தாதவர்களை கண்டுபிடித்து தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.  மேலும் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனாவுக்கு எதிராக போராடி பெற்ற பயனை காப்பாற்ற கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும்.  அத்துடன் ஏதேனும் அறிகுறி தென்பட்டால் உடனடியாக அவர்களை தனிமைப்படுத்தி தீவிர சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!