கொரோனாவால் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம்? மத்திய அரசு விளக்கம்!
நாட்டில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதற்கு மத்திய அரசு பதிலளிக்கும் படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், விளக்க மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
மத்திய அரசு:
இந்தியாவில் கடந்த 2020ம் ஆண்டு முதல் தற்போது வரை கொரோனா நோய்த்தொற்றால் பல தரப்பு மக்கள் தங்களது உயிரை இழந்து வருகின்றனர். இதனால் குடும்பங்கள் தங்கள் வாழ்வாதாரம் இழந்து வருகின்றனர். தற்போது அவர்களை பாதுகாக்கும் வகையில் கொரோனாவால் உயிரியிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடாக சம்மந்தப்பட்ட துறைகள் வழங்க வேண்டும் என்று கூறி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இது குறித்து மத்திய அரசு பதிலளிக்கும் படி நீதிமன்றம் தெரிவித்தது.
மதுபான பார்கள் இரவு 10 மணிவரை செயல்பட அனுமதி – அரசு அறிவிப்பு!
தற்போது மத்திய அரசு இதுகுறித்து தெரிவித்ததாவது, 2021-22 ஆண்டுக்கு அனைத்து மாநிலங்களுக்கான மாநில பேரிடர் மீட்பு நிதியின் மொத்த ஒதுக்கீடே ரூ.22,184 கோடியாகும். இந்த பெருந்தொற்றல் 3.85 லட்சத்திற்கும் மேலான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்த உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். எனவே ஒவ்வொரு நபருக்கும் ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டுமானால் மாநில பேரிடர் மீட்பு நிதி முழுவதையும் பயன்படுத்த வேண்டும். இந்த செலவீனம் மேலும் அதிகரிக்கும்.
அண்ணா பல்கலைக்கழக மறு செமஸ்டர் தேர்வு – நாளை முதல் தொடக்கம்!!
இழப்பீடு வழங்குவதன் மூலம் ஏற்படும் நிதிச்சுமை காரணமாக சுகாதாரம் மற்றும் மருத்துவ திட்டங்களுக்கான நிதியும் குறையம். எனவே கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சம் வழங்குவது சாத்தியமற்றது. தற்போது வரை மத்திய மற்றும் மாநில அரசுகள் தடுப்பூசி, படுக்கை வசதி போன்றவற்றிற்கு ஆயிரக்கணக்கான கோடிகளை செலவளித்துள்ளன. மேலும் பல ஆயிரம் கோடிகள் செலவழிக்க வாய்ப்புள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.