இனி மத்திய அரசின் போட்டி தேர்வுகள் ஹிந்தி மொழியில் மட்டுமே நடத்தப்படும்? – அரசு விளக்கம்!
மத்திய அரசின் பணியாளர் ஆட்சேர்ப்பு வாரியமானது நடத்தப்படும் தேர்வுகளை இந்தி மொழியில் மட்டும் நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில் இது குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
மத்திய அரசு விளக்கம்:
நாடு முழுவதும் இந்தி திணிப்பிற்கு எதிராக பல்வேறு புகார்கள் எழுந்து வருகிறது. மேலும், உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்கள் குடியரசுத் தலைவரிடம் மத்திய அரசின் கல்வி நிலையங்கள் மற்றும் அலுவலக மொழியாக இந்தியை மாற்ற கோரிக்கை அனுப்பினார். மேலும் மத்திய அரசின் பணியாளர் தேர்வு வாரியங்கள் மூலம் நடத்தப்படும் தேர்வுகள் இனி இந்தியில் நடத்தப்படும் என்றும் தகவல்கள் வெளியானது.
தமிழகத்தில் நாளை பள்ளிகளுக்கு அறிவிக்கப்பட்ட விடுமுறை – கனமழை எதிரொலி! ஆட்சியரின் உத்தரவு!
Exams Daily Mobile App Download
ஆனால், SSC-யின் மூலம் நடத்தப்படும் மத்திய அரசின் பணியாளர் நியமன தேர்வுகளுக்கு இந்திய அரசியலமைப்பின் 8 வது அட்டவணையில் உள்ள 22 மொழிகளிலும் தேர்வுகள் நடத்தப்படும் என்றும், இந்தியில் மட்டும் இந்த தேர்வுகளை நடத்தும் திட்டம் இல்லை என உள்துறை இணை அமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா அவர்கள் நாடாளுமன்றத்தில் தற்போது விளக்கம் அளித்துள்ளார்.