பிரபல கால்பந்து பயிற்சியாளர் பிமல் கோஷ் – துரோணாச்சார்யா விருது அறிவிப்பு!

0
பிரபல கால்பந்து பயிற்சியாளர் பிமல் கோஷ் - துரோணாச்சார்யா விருது அறிவிப்பு!
பிரபல கால்பந்து பயிற்சியாளர் பிமல் கோஷ் - துரோணாச்சார்யா விருது அறிவிப்பு!
பிரபல கால்பந்து பயிற்சியாளர் பிமல் கோஷ் – துரோணாச்சார்யா விருது அறிவிப்பு!

இந்தியாவில் நடப்பு ஆண்டிற்கான துரோணாச்சார்யா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் நாக்பூர் மற்றும் மும்பையில் பல கால்பந்து வீரர்களை பயிற்சியாளராக உருவாக்கிய சிறந்த கால்பந்து பயிற்சியாளரான பிமல் கோஷ் விருதுக்கு தேர்வாகியுள்ளார்.

துரோணாச்சார்யா விருது:

இந்தியாவில் மத்திய அரசு ஆண்டுதோறும் விளையாட்டு துறையையும், விளையாட்டு வீரர், வீராங்கனைகளையும் சிறப்பிக்கும் வகையில் பல விருதுகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் 2022ம் ஆண்டுக்கான சிறந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது.

Exams Daily Mobile App Download

அதில் டேபிள் டென்னிஸ் விளையாட்டு வீரர் சரத்கமலுக்கு மேஜர் தயான்சந்த் கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து செஸ் வீரர் பிரக்ஞானந்தா, துப்பாக்கி சுடுதல் வீராங்கனை இளவேனில் வாலறிவனுக்கு அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. விளையாட்டு வீரர்களுக்கு மட்டுமல்ல அவர்களை போல் சிறந்த வீரர்களை உருவாக்கிய பயிற்சியாளர்களுக்கும் கௌரவிக்கப்படுகிறார்கள்.

தமிழகத்தில் 5 புதிய ஆதி திராவிடர் நல விடுதி – அரசாணை வெளியீடு!

Follow our Instagram for more Latest Updates

தற்போது நாக்பூர் மற்றும் மும்பையில் பல கால்பந்து வீரர்களை உருவாக்கிய கால்பந்து விளையாட்டு பயிற்சியாளர் பிமல் கோஷ் அவர்கள் வாழ்நாள் பிரிவில் துரோணாச்சார்யா விருதுக்கு தேர்வாகியுள்ளார். இவர் கடந்த 28 ஆண்டுகளில் 35க்கும் மேற்பட்ட சர்வதேச வீரர்களை உருவாக்கியுள்ளார். இவரிடம் பயிற்சி பெற்ற மாணவர்கள் தற்போது பல முன்னணி கால்பந்து அணிகளில் பயிற்சியாளராக உள்ளனர். இவருக்கான துரோணாச்சார்யா விருது வரும் நவம்பர் 30 ஆம் தேதி புது டெல்லியில் நடைபெறும் விழாவில் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!