முடிவுக்கு வரும் Work From Home முறை – மத்திய அரசு ஊழியர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

0
முடிவுக்கு வரும் Work From Home முறை - மத்திய அரசு ஊழியர்களுக்கான முக்கிய அறிவிப்பு!
முடிவுக்கு வரும் Work From Home முறை - மத்திய அரசு ஊழியர்களுக்கான முக்கிய அறிவிப்பு!
முடிவுக்கு வரும் Work From Home முறை – மத்திய அரசு ஊழியர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

மத்திய அரசு ஊழியர்கள் சிலர் தற்போது வரைக்கும் வீட்டில் இருந்தே வேலை பார்த்து வருகின்றனர். இதற்கு பிறகு Work From Home முறை கிடையாது என அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

Work From Home:

இந்தியாவில் கொரோனா பரவலின் போது தனியார் மற்றும் அரசு ஊழியர்கள் என அனைவரும் வீட்டில் இருந்தபடியே வேலை பார்த்து வந்தனர். ஆனால், கொரோனா பரவல் கட்டுப்பாட்டுக்குள் வந்த பிறகும் கூட பல அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் ஊழியர்கள் தற்போது வரைக்குமே வீட்டில் இருந்து தான் வேலை பார்த்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், சமீபத்தில் நடத்தப்பட்ட மக்களவை கூட்டத்தில் வீட்டில் இருந்து வேலைபார்க்கும்படியான கேள்வி எழுப்பப்பட்டது.

அதில், கூடிய விரைவில் மத்திய அரசு ஊழியர்கள் அனைவரும் வீட்டில் இருந்து வேலை செய்யாமல் அலுவலகத்திற்கு செல்ல வலியுறுத்தப்படும் என மக்களவையில் ஜிதேந்திர சிங் அறிவித்துள்ளார். மேலும், வேலையின் தன்மை மற்றும் அந்த வேலைக்கான செயல்பாட்டுத் தேவைகள் ஆகியவற்றின் காரணமாக அரசாங்க ஊழியர்களால் வீட்டில் இருந்தபடி வேலை செய்ய சாத்தியமில்லை. இதனால், அரசு ஊழியர்கள் அனைவரும் அலுவலகங்களுக்கு சென்றே வேலை பார்க்க வேண்டும் என மத்திய பணியாளர், பொதுமக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதியத் துறை அமைச்சகத்தின் இணை அமைச்சர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Follow our Instagram for more Latest Updates

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!