IDBI வங்கியின் நிர்வாக கட்டுப்பாடு மாற்றம் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!!
பங்கு விற்பனை மற்றும் நிர்வாக கட்டுப்பாட்டில் IDBI வங்கி சில மாற்றங்களை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த புதிய நிர்வாக மாற்றத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
நிர்வாக மாற்றம்:
இந்தியாவின் முதன்மை வங்கிகளில் ஒன்றான IDBI வங்கி தனது நிர்வாகம் மற்றும் பங்கு விற்பனையில் சில மாற்றங்களை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளது. அதன்படி IDBI வங்கியின் இந்த நிர்வாக மாற்றத்துக்கு தனது கொள்கை அடிப்படைக்கு உட்பட்டு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த IDBI வங்கியில் மத்திய அரசு 45.58 சதவீதம் பங்குகளையும், LIC நிறுவனம் 49.24 சதவீத பங்குகளையும் வைத்துள்ளது.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் IDBI வங்கியின் தற்போதைய நிர்வாக கட்டுப்பாடு LIC நிறுவனத்திடம் உள்ள நிலையில், IDBI வங்கியில் உள்ள தனது 49.24 சதவீத பங்குகளின் அளவை குறைத்து கொள்ள LIC நிறுவனம் தீர்மானம் செய்துள்ளது. மேலும் IDBI வங்கியின் நிர்வாகத்தையும், அதன் பங்குகளை வாங்கவுள்ள புதிய நிறுவனம், ஏற்கனவே உள்ள IDBI வங்கியின் முதலீடு, தொழில்நுட்பம் ஆகியவற்றில் மாற்றத்தை ஏற்படுத்தி சிறந்த நிர்வாக நடைமுறைகளை செயல்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்திற்கு கூடுதல் 1 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் – இன்று வருகை!!
இதன் மூலம் IDBI வங்கி மத்திய அரசு அல்லது LIC நிறுவனத்தை சாராமல் அதிக தொழில்களை உருவாக்கி, மேலும் வளர்ச்சி அடைய முடியும் எனவும் கருத்துக்கள் நிலவுகிறது. இந்த புதிய பங்கு விற்பனை மூலம் IDBI வங்கிக்கு கிடைக்கும் நிதித்தொகை, மத்திய அரசின் சில நிதி மேம்பாட்டு திட்டங்களுக்கும், மக்கள் நலனுக்கும் பயன்படும் எனவும் கூறப்படுகிறது.