பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு – தமிழக அரசு எதிர்ப்பு! அனைத்து கட்சி கூட்டம் நடத்த திட்டம்!
இந்தியாவில் பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பு பிரிவினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்புகள் தெரிவித்து வரும் நிலையில் இது குறித்து ஆலோசிக்க தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்த உள்ளது.
இட ஒதுக்கீடு:
இந்தியாவில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், சிறுபான்மையினர், பட்டியல் இனத்தவர்கள் போன்றோர்களுக்கு கல்வி மற்றும் அரசு வேலைகளில் குறிப்பிட்ட சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நடப்பு ஆண்டு முதல் தமிழகத்தில் தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கும் இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Follow our Instagram for more Latest Updates
இந்த நிலையில் மத்திய அரசு பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் சமுதாயத்திற்கு 10% இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. இந்த அறிவிப்புக்கு தமிழக அரசு கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது. இதனை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு மத்திய அரசு வழங்கிய 10% இட ஒதுக்கீடு செல்லும் என்று தீர்ப்பளித்துள்ளது.
நாடு முழுவதும் 10 லட்சம் ரேஷன் கார்டுகள் ரத்து – மத்திய அரசு திடீர் அறிவிப்பு!
Exams Daily Mobile App Download
இதனையடுத்து தமிழக அரசு இட ஒதுக்கீட்டில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசிக்க அனைத்து கட்சி கூட்டம் நடத்தவிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது இட ஒதுக்கீட்டிற்கு ஆதரவாக உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வலியுறுத்தி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தை நாடவுள்ளதாகவும் அதற்கு முன் அனைத்து கட்சிகளிடம் இருந்தும் முதல்வர் கருத்து கேட்கவுள்ளதாவும் கூறப்படுகிறது.