கொரோனா தடுப்பூசிகளை வீணாக்கும் மாநிலங்கள் பட்டியல் – மத்திய அரசு வெளியீடு!
கொரோனா தடுப்பூசிகளை வீணாக்கும் மாநிலங்களின் முழு விவரத்தை மத்திய அரசு தற்போது வெளியிட்டுள்ளது. அதில் ஜார்க்கண்ட் மாநிலம் அதிக அளவில் தடுப்பூசியை வீணாக்கியுள்ளதாக தெரிய வந்துள்ளது.
கொரோனா தடுப்பூசி:
இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் முதல் அவசரகால பயன்பாட்டிற்காக கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய இரண்டு தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. சுமார் ஐந்து மாத காலத்திற்கும் மேலாக பல கட்டங்களாக மக்களுக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு தடுப்பூசி உற்பத்தியாளர்களிடம் இருந்து நேரடியாக தடுப்பூசி கொள்முதலை மேற்கொண்டு மாநில/யூனியன் பிரதேச அரசுகளுக்கு இலவசமாக வழங்கி வருகிறது.
தமிழகத்தில் நீட் தேர்வுக்கான பயிற்சி துவக்கம் – ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்!
இந்நிலையில் சில மாநிலங்கள் அதிக அளவில் தடுப்பூசி வீணடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது மத்திய அரசு மற்றும் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. தற்போது மாநில வாரியாக தடுப்பூசி வீணாக்குதல் குறித்த விவரங்களை மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதன்படி நாட்டில் அதிக அளவில் ஜார்கண்ட் மாநிலம் 33.95 சதவிகிதம் தடுப்பூசி டோஸ்களை வீணாக்கியுள்ளது. இதை தொடர்ந்து சத்தீஸ்கர் 15.79 சதவிகிதம், மத்திய பிரதேசம் 7.35 சதவிகிதம், பஞ்சாப் 7.08 சதவிகிதம், டெல்லி 3.95 சதவிகிதம் தடுப்பூசிகள் வீணாகி உள்ளது.
TN Job “FB Group” Join Now
ராஜஸ்தான் 3.91 சதவிகிதம், உத்தரபிரதேசம் 3.78 சதவிகிதம், குஜராத் 3.63 மற்றும் மராட்டியம் 3.59 சதவிகித தடுப்பூசிகளை வீணாக்கியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் சில மாநிலங்களில் ஒரு டோஸ் தடுப்பூசி கூட வீணடிக்காமல் செலுத்தப்படுவதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. அந்த வகையில் கேரள மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் தடுப்பூசி வீணாக்காமல் செலுத்தப்படுவதாகவும் இந்த மாநிலங்களில் -6.37 சதவிகிதம் மற்றும் -5.48 சதவிகிதம் என வீணாக்குதல் சதவிகிதம் எதிர்மறையாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.