உயர்கல்விக்காக 30 லட்சம் இந்தியர்கள் வெளிநாடு பயணம் – கல்வி அமைச்சகம் தகவல்!!

0
உயர்கல்விக்காக 30 லட்சம் இந்தியர்கள் வெளிநாடு பயணம் - கல்வி
உயர்கல்விக்காக 30 லட்சம் இந்தியர்கள் வெளிநாடு பயணம் - கல்வி
உயர்கல்விக்காக 30 லட்சம் இந்தியர்கள் வெளிநாடு பயணம் – கல்வி அமைச்சகம் தகவல்!!

கடந்த ஆண்டு வரைக்கும் சுமார் 30 லட்சம் இந்தியர்கள் உயர் கல்விக்காக வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாக மத்திய கல்வி அமைச்சகம் தகவல் அளித்துள்ளது. இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டில் மட்டும் 7 லட்சமாக உள்ளது.

வெளிநாடு பயணம்

இந்தியாவில் பள்ளிப்படிப்பை முடித்து வெளிநாடுகளுக்கு சென்று உயர்கல்வி பயிலும் நபர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நமது நாட்டில் படித்து, இங்கேயே உழைத்து, இந்தியாவை வெற்றிப்பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று பேசப்பட்டு வரும் சூழலில், வெளிநாடுகளுக்கு சென்று உயர்கல்வி பெறும் மாணவர்களின் எண்ணிக்கை லட்சக்கணக்கில் உயர்ந்துள்ளதாக அறிக்கைகள் வெளியாகியுள்ளது. அந்த வகையில் கடந்த 2022 ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 7.5 லட்சம் மாணவர்கள் உயர்கல்விக்காக பல்வேறு நாடுகளுக்கு சென்றுள்ளனர்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!!

இது தொடர்பாக மத்திய கல்வி இணை அமைச்சர் சுபாஸ் சர்க்கார் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் கடந்த 2017 முதல் 2022 ஆம் ஆண்டு வரைக்கும் 30 லட்சத்திற்கும் அதிகமான இந்தியர்கள் உயர்கல்விக்காக வெளிநாடு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக கடந்த 2021 ஆம் ஆண்டில் 4.4 லட்சம் பேரும், 2020 ஆம் ஆண்டில் 2.59 லட்சம் பேரும், 2019 ஆம் ஆண்டில் 5.86 லட்சம் பேரும் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாக அறிக்கைகள் கூறுகிறது.

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!