உயர்கல்வி மாணவர் சேர்க்கை சென்டாக் விண்ணப்பம் – இன்று முதல் தொடக்கம்!
உயர்கல்வி மற்றும் பொறியியல் கல்லூரியில் சேருவதற்கான சென்டாக் விண்ணப்ப விநியோகம் இன்று மதியம் 12 மணிக்கு மேல் ஆரம்பிக்கப்படும் எனவும் அதனை கல்வித்துறை அலுவலகத்தில் இருந்து கல்வித் துறை அமைச்சர் ஆ.நமச்சிவாயம் தொடங்கி வைப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
சென்டாக்:
கொரோனா பெருந்தொற்று காரணமாக பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டு இருக்கும் நிலையில் மாணவர் சேர்க்கை மற்றும் கவுன்சிலிங் ஆன்லைன் மூலம் நடத்தப்படுகிறது. அதனை தொடர்ந்து புதுச்சேரி மாநிலத்தில் மருத்துவம், பொறியியல், கலை – அறிவியல் கல்லூரிகளில் அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான மாணவர் சேர்க்கை, ‘சென்டாக்’ மூலம் நடத்தப்பட்டது. இந்த ஆண்டிற்கான கவுன்சிலிங் ஏற்பாடுகளை சென்டாக் முடங்கியுள்ளதால் இன்ஜினியரிங், கலை – அறிவியல் படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்பங்களை மட்டும் ஆன்லைனில் வழங்குவதாக திட்டமிடப்பட்டுள்ளது.
TN Budget 2021 Live Updates – தமிழக அரசின் இ-பட்ஜெட் தாக்கல்!
தற்போது புதுவையில் உயர்கல்வி மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு விண்ணப்ப விநியோகம் இன்று தொடங்குகிறது என கூறப்பட்டுள்ளது. புதுச்சேரி கல்வித்துறை வளாகத்தில் இன்று பிற்பகல் 12 மணி அளவில் கல்வித்துறை அமைச்சர் ஆ. நமச்சிவாயம் அவர்கள் உயர்கல்வி மற்றும் பொறியியல் கல்லூரியில் சேருவதற்கான சென்டாக் விண்ணப்பம் விநியோகம் ஆன்லைன் மூலம் கல்வித்துறை அலுவலகத்தில் இருந்து தொடங்கி வைக்க இருக்கிறார்.
TN Job “FB Group” Join Now
விண்ணப்பிக்க விருப்பமுள்ள மாணவர்கள் தங்கள் விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் இன்று முதல் பதிவு செய்யலாம் என குறிப்பிடப்படுகிறது. இன்று பிற்பகல் 12 மணிக்கு மேல் ஆன்லைனில் சென்டாக் விண்ணப்பங்களை பெற்று கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்டாக் விண்ணப்பத்தினை பயன்படுத்தி மாணவர்கள் உயர்கல்வி மற்றும் பொறியியல் கல்லூரியில் சேருவதற்கு விண்ணப்பித்து கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.