சென்டாக் கல்லூரி மாணவர் சேர்க்கை – செப்.7 வரை கால அவகாசம் நீட்டிப்பு!
புதுச்சேரியில் நீட் சாரா பட்டப் படிப்புகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கால அவகாசம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், மேலும் செப்டம்பர் 7ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.
மாணவர் சேர்க்கை:
புதுச்சேரியில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பீடு முறையிலான மதிப்பெண்கள் வெளியானதை அடுத்து அனைத்து கல்லூரிகளுக்கும் மாணவர் சேர்க்கை நடைபெற்றது. அதனை தொடர்ந்து புதிய கல்வியாண்டு தொடங்கியது முதல் அனைத்து படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை பணிகள் தொடங்கியது. மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வுக்கு விண்ணப்ப பதிவு தொடங்கி முடிவடைந்துள்ளது. மேலும் தேர்வு மையங்கள் மற்றும் தேர்வு நடைபெறும் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்களுக்கு கொரோனா உறுதி – பள்ளிகள் மூடல்! தூத்துக்குடியில் பரபரப்பு!
இந்தியா முழுவதும் செப்டம்பர் 12ம் தேதி நீட் தேர்வு நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. நடப்பாண்டில் நீட் தேர்வானது வினாத்தாள்கள் மாற்றம் செய்யப்பட்டு 13 மொழிகளில் நடைபெறவுள்ளது. நீட் தேர்வை தொடர்ந்து நீட் சாரா பட்ட படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையும் புதுச்சேரியில் நடைபெற்று வருகிறது. நீட் சாரா கலை, அறிவியல் மற்றும் வணிகவியல் பட்டப் படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆகஸ்ட் 31ம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டது.
TN Job “FB Group” Join Now
இந்த கால அவகாசம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் பிடெக், பிஎஸ்சி, பிஎஸ்சி, பிஎஸ்சி நர்சிங், பிபிடி, பி.பார்ம், பிஏ எல்எல்பி, பிஏ, பிஎஸ்சி, பிகாம், பிபிஏ, பிசிஏ உள்ளிட்ட இளநிலை பட்ட படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசமானது செப்டம்பர் 7ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மேலும் விவரங்களை www.centacpuducherry.in என்ற இணையதளத்தில் அறியலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.