தமிழகத்தில் புதிதாக வீடு கட்டுவோர் கவனத்திற்கு – சிமெண்ட் விலை ரூ.120 அதிகரிப்பு!
தமிழகத்தில் சிமெண்ட் விலை ரூபாய் 120 அதிகரித்துள்ளது. இதனால் கட்டுமானத் துறையினர் அதிர்ச்சி அடைத்துள்ளனர். சிமெண்ட் விலை ஏற்றத்தை அரசு தலையிட்டு சரி செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
சிமெண்ட் விலை:
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து மக்கள் மீண்டும் வேலைகளுக்கு சென்று வருகின்றனர். இந்த நேரத்தில் சிமிண்ட் விலை அதிகரித்து வருகிறது. இதனால் கட்டுமான துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஏற்கனவே கொரோனோவால் வேலையிழந்து சிரமப்பட்டு வந்த நிலையில் தற்போது சிமெண்ட் விலை அதிகரிப்பால் பொருளாதார நெருக்கடியில் கட்டிடப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதால் கட்டுமான பணியில் ஈடுபட்டுள்ள கூலி தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மையில் சில்லறை விற்பனையில் ஒரு மூட்டை சிமெண்ட் மூட்டை விலை 480 ரூபாயாக உயர்ந்தது.
தமிழகத்தில் தீவிர ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்? முதல்வர் நாளை ஆலோசனை!
இந்த விலை ஏற்றத்தை கண்டித்து பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். சிமெண்ட் உற்பத்திக்கு தேவையான நிலக்கரியின் விலை உயர்ந்து வருவதால், சிமெண்ட் விலை அதிகரிக்கிறது என்று தென்னிந்திய சிமெண்ட் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்தது. இந்த நிலையில் தற்போது போது சிமெண்ட் விலை 120 ரூபாய் அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு முன்வர வேண்டும் என்று நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தன்னார்வலர்களுக்கு அழைப்பு விடுக்கும் தமிழக அரசு – ‘இல்லம் தேடி கல்வி திட்டம்’!
அதில் மத்திய அரசின் அனுமதியுடன் சிமெண்ட்டை இறக்குமதி செய்து குறைந்த விலையில் விற்பனை செய்ய தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சிமெண்ட் உற்பத்தி நிறுவனங்களிடம் ஆலோசனை மேற்கொண்டு சிமெண்ட் விலை குறைக்க அரசு வலியுறுத்த வேண்டும். தமிழகத்தில் சிமெண்ட் விலையை ஒழுங்குபடுத்தி நிலையான விலையை நடைமுறைப்படுத்த தனி ஆணையம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.