தமிழகத்தில் சிமெண்ட் விலை கிடுகிடுவென அதிகரிப்பு – பொதுமக்கள் கலக்கம்!
தமிழகத்தில் சிமிண்ட் விலை 60 ரூபாய் உயர்ந்து கட்டுமான துறையினரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் தமிழக அரசு தலையீட்டு சிமிண்ட் விலை உயர்வை கண்டிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிமிண்ட் விலை :
தமிழகத்தில் கடந்த வருடம் முதல் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்றால் விதிக்கப்பட்ட ஊரடங்கால் ஏராளமான மக்கள் தங்களின் அன்றாட வேலைகளை இழந்து பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வந்தனர். அன்றாடம் வேலை செய்து அதன் மூலம் வருமானம் ஈட்டும் கூலி தொழிலார்களுக்கு ஊரடங்கு காலகட்டம் பெரும் சவாலாக இருந்தது. மற்ற தொழிலார்களை தொடர்ந்து கட்டுமான பணிகளில் ஈடுபட்டிருந்தோரும் வேலை இல்லாததால் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
அக்.9ம் தேதி சம்பளத்துடன் கூடிய விடுமுறை – தொழிலாளர் நலத்துறை அறிவிப்பு!
தற்போது தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருவதால் அரசு பல்வேறு தளர்வுகளை அளித்து வருகிறது. இந்த நிலையில் மக்கள் வேலைக்கு செல்ல தொடங்கி வரும் நிலையில் சிமிண்ட் விலை அதிகரித்து இருப்பது கட்டுமான தொழிளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிமெண்ட் விலை திடீரென 70 ரூபாய் உயர்த்தப்பட்டது. இதனை கண்டிக்க கோரி கட்டுமான துறையினர் அரசிடம் முறையிட்டனர். அப்போது அரசு பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு 60 ரூபாய் வரை சிமிண்ட் விலையை குறைந்தது.
தமிழகத்தில் தீபாவளி பண்டிகைக்கு சூப்பர் அறிவிப்பு – தாம்பரம் டூ நாகர்கோவில் அதிவேக சிறப்பு ரயில்!
தற்போது மீண்டும் சிமிண்ட் அதிகரித்துள்ளது. 60 ரூபாய் சில்லரை விற்பனையில் ஒரு மூட்டை சிமெண்ட் 420 ரூபாயில் இருந்து 480 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதனால் வீடு கட்டும் முயற்சியில் இருப்பவர்கள் கவலையில் உள்ளனர். சிமிண்ட் விலை உயர்வால் எங்களது பணிகள் முழுவதும் முடங்கி விட்டது என்று கட்டுமான துறையினர் கூறுகின்றனர். உடனடியாக தமிழக அரசு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.