தமிழகத்தில் ஒரு சிமெண்ட் மூட்டை விலை ரூ.520 ஆக உயர்வு – கட்டுமான பொறியாளர்கள் அதிர்ச்சி!!
தமிழகத்தில் கொரோனா நோய்பரவல் காரணமாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருந்து வரும் நிலையில், தற்போது கட்டுமான பணிகளுக்கு தேவைப்படும் சிமெண்ட் மூட்டையின் விலை கடும் உச்சம் அடைந்து ரூ.520 ஆக விற்பனை செய்யப்படுகிறது. இதனால் கட்டுமான பொறியாளர்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளனர்.
சிமெண்ட் விலை:
தமிழகத்தில் கடந்த மூன்று மாத காலத்திற்கு மேலாக தீவிரம் எடுத்து வரும் கொரோனா நோய் தொற்று பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனை கட்டுப்படுத்த தற்போது தமிழகத்தில் விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கையை பாதித்துள்ளது. மேலும் ஊரடங்கு காரணமாக சில தொழில் துறைகளுக்கு மட்டும் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் சில துறைகள் முழுவதும் முடங்கி விட்டன.
தமிழகத்தில் ஜூன் 14 முதல் தலைமை ஆசிரியர்கள் பள்ளிக்கு வர உத்தரவு – கல்வித்துறை அறிவிப்பு!
இதனால் பல தரப்பு மக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களை பாதுகாக்கும் பொருட்டு தமிழக அரசு பல்வேறு நிவாரணங்களை வழங்கி வருகிறது. ஆனால் மறுபக்கம் சில அத்தியாவசிய பொருட்களின் விலை தொடர்ந்து உச்சம் அடைந்து வருகிறது. அதன்படி சமையல் எண்ணெய், பெட்ரோல், டீசல் போன்றவற்றின் விலை தொடர்ந்து புதிய உச்சம் அடைந்து வருகிறது. தற்போது இதனை தொடர்ந்து கட்டுமான பணிகளுக்கு தேவைப்படும் சிமெண்ட் மூட்டைகளின் விலை புதிய உச்சம் கண்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
அதன்படி சில தினங்களுக்கு முன்பு ஒரு சிமெண்ட் மூட்டை ரூ. 370க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் ஊரடங்கு காலத்தில் ரூ.150 அதிகரித்து தற்போது ரூ.520 ஆக உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு அனைவரையும் அதிர வைத்துள்ளது. மேலும் தற்போது தமிழகத்தில் விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக கட்டுமான பொருட்களின் விலை உயர்ந்துள்ளது என்று கட்டுமான பொறியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.