ரூ.35,000/- ஊதியத்தில் அரசு வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!
மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம் (CECRI) சில நாட்களுக்கு முன் வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. Project Associate-I, II பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள நபர்கள் இன்றே விண்ணப்பித்து பயன் பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்றவை கீழ்வருமாறு தரப்பட்டுள்ளது.
மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு விவரங்கள்:
- மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் (CECRI) காலியாக உள்ள Project Associate-I பணிக்கு என 05 இடமும், Project Associate-II பணிக்கு என 01 இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது.
Join Our TNPSC Coaching Center
- Project Associate பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Chemistry, General, Inorganic, Physical, Organic, Polymer, Analytical Chemistry போன்ற பாடப்பிரிவுகளில் M.Sc Degree-யை பெற்றவராக இருக்க வேண்டும்.
- இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Materials Synthesis, Inorganic Structural Chemistry போன்ற பணி சார்ந்த துறைகளில் அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
- Project Associate பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 35 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும். மேலும் OBC பிரிவினருக்கு 03 வருடம், SC / ST பிரிவினருக்கு 05 வருடம் வயது தளர்வும் தரப்பட்டுள்ளது.
- Project Associate-I பணிக்கு ரூ.25,000/- முதல் ரூ.31,000/- வரை மாத சம்பளமாகவும், Project Associate-I பணிக்கு ரூ.28,000/- முதல் ரூ.35,000/- வரை மாத சம்பளமாகவும் வழங்கப்படும். மேலும் ஊதியம் தவிர HRA போன்ற இதர ஊதியங்களும் அளிக்கப்படும்.
Exams Daily Mobile App Download
- இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 13.05.2022 அன்று காலை 9.30 மணிக்கு நடைபெறும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.
CECRI விண்ணப்பிக்கும் வழிமுறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து நேர்முக தேர்விற்கு வரும் போது நேரில் கொண்டு வந்து சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் நாளை (13.05.2022) நடைபெற உள்ள நேர்முக தேர்வில் தவறாது கலந்து கொண்டு பயன்பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.