CDAC நிறுவனத்தில் 100+ காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு…!
மேம்பட்ட கணினி மேம்பாட்டு மையம் (CDAC) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Project Engineer பணிக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு விவரங்கள்:
- மேம்பட்ட கணினி மேம்பாட்டு மையம் வெளியிட்ட அறிவிப்பில், Project Engineer பணிக்கு என்று மொத்தமாக 102 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது.
Exams Daily Mobile App Download
- மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரிகள் / பல்கலைக்கழகங்கள் / கல்வி நிலையத்தில் Computer / IT / Electronics / Electrical / Telecommunications பாடப்பிரிவில் BE / B.Tech / MCA / Post Graduate degree போன்ற பணிக்கு தேவையான ஒரு டிகிரி முடித்திருப்பது அவசியமாகும். மேலும் கல்வித் தகுதி குறித்த முழு விவரங்களை அதிகாரப்பூர்வ தளத்தை பார்வையிடவும்.
- மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், விண்ணப்பிக்கும் பணிக்கு தகுந்தார்போல் பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தது 1 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 15 ஆண்டுகள் வரை முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும்.
- மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களில் தேர்வு செய்யப்படும் பணி மற்றும் பதவிக்கு தகுந்தாற்போல் தகுதி மற்றும் அனுபவத்தை பொறுத்து மாத ஊதியம் பெறுவார்கள்.
- மேற்கண்ட பணிகளுக்கு அதிகபட்ச வயதானது பணி மற்றும் பதவிக்கு தகுந்தாற்போல் 30 வயது முதல் 45 வயது வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
தமிழகத்தின் சிறந்த TNPSC coaching center
- மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் தேர்வுகள் அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்து பணி அமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 24.05.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.