தமிழக அரசு பேருந்துகளில் CCTV கேமரா பொருத்தும் பணிகள் -அமைச்சர் அறிவிப்பு!
தமிழகத்தில் நகர பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் செய்யலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டதை தொடர்ந்து, தற்போது பெண்களின் பாதுகாப்பிற்காக சிசிடிவி பொருத்தும் பணிகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் ராஜ கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
அரசு பேருந்துகள்:
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பொதுப்போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. புதிய முதல்வராக முக ஸ்டாலின் மே 7 ஆம் தேதி பொறுப்பேற்ற போது நகர பேருந்துகளில் பெண்கள் இலவச பயணம் செய்ய அனுமதி என்ற அரசாணையை வெளியிட்டார். ஆனால் கொரோனா காரணமாக இந்த அறிவிப்பு ஜூலை 12 ஆம் தேதி முதல் தான் அமலுக்கு வந்தது. மேலும் பயணம் செய்யும் பெண்களுக்கு இலவசமாக டிக்கெட் வழங்கப்பட்டு வருகிறது.
பொறுக்கிய பெத்து வச்சிருக்கீங்க.. கண்ணனை குடும்பத்தினர் முன் திட்டும் கஸ்தூரி – இன்றைய எபிசோட்!
அவ்வாறு இதுவரை 78 லட்சம் பெண்கள் பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், நகர பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் என்ற அறிவிப்பு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் பெண் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு ஏற்ப பேருந்துகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படும். மேலும் கொரோனா பரவல் காரணமாக குறைவான பேருந்துகளே இயக்கப்பட்டு வருகின்றன. படிப்படியாக அனைத்து பேருந்துகளும் மீண்டும் இயக்கப்படும்.
TN Job “FB Group” Join Now
மேலும் பேருந்துகளில் நிர்பயா திட்டத்தின் கீழ் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய முதற்கட்டமாக சென்னையில் 2,500 பேருந்துகளில் ரூ.71 கோடி செலவில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், விரைவில் தமிழகம் முழுவதும் இந்த திட்டம் நடைமுறைக்கு வரும் என அவர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே அரசு பேருந்துகளில் திருக்குறள் மற்றும் அதன் விளக்கத்துடன் கூடிய பலகை பொருத்தும் பணிகள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கதாகும்.