தமிழக அரசு மாநகர பேருந்துகளில் புதிய வசதி – போக்குவரத்து கழக இயக்குனர்!
தமிழகத்தில் முறைகேடுகளை தடுக்கவும், பயணிகளின் பாதுகாப்பிற்கும் 2500 மாநகர பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருவதாக அரசு போக்குவரத்து கழக இயக்குனர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
சிசிடிவி கேமராக்கள்:
தமிழகத்தில் அரசு மாநகர பேருந்துகளில் எப்போதும் கூட்டம் அதிகமாகவே காணப்படும். காலை நேரத்தில் பணிகளுக்கு செல்பவர்கள் அதிகம் பேருந்துகளில் பயணம் செய்கின்றனர். இந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி சில நபர்கள் பயணிகளின் பைகளில் இருந்து பணத்தை கையாடல் செய்கின்றனர். மேலும் பேருந்து பயணிகள் கொண்டு வரும் அவர்களின் உடமைகளை திருடுவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். அதுமட்டுமின்றி பல்வேறு வரம்பு மீறிய செயல்படும் குற்ற சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.
தமிழக பாலிடெக்னிக் கல்லூரிகளில் நேரடி 2ம் ஆண்டு மாணவர் சேர்க்கை – இன்றே கடைசி நாள்!
தற்போது முதல்வரின் உத்தரவின் படி, அரசு நகர பேருந்துகளில் பெண்கள், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பயணத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் பேருந்துகளில் அதிக எண்ணிக்கையில் பெண்கள் பயணம் செய்கின்றனர். எனவே முறைகேடுகளை தடுக்கவும், பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் 2500 மாநகர பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் அதை கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்க போக்குவரத்து துறை திட்டமிட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
ஒவ்வொரு பேருந்திலும் 3 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது . 2 கேமராக்கள் முன் நுழைவு வாயில் மற்றும் பின் நுழைவு வாயிலை கண்காணிக்கும் வகையிலும், 1 கேமரா ஓட்டுநர் இருக்கைக்கு அருகிலும் பொருத்தப்பட உள்ளது. இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. செப்டம்பர் மாதத்தில் பேருந்துகளில் கேமராக்கள் செலுத்தும் பணிகள் முழுமையாக நிறைவடையும் என்று போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் அன்பு ஆபிரகாம் தெரிவித்துள்ளார்.