டிகிரி முடித்தவர்களுக்கான அரசு வேலை – மாத ஊதியம்:ரூ.35,000/-
ஹோமியோபதி ஆராய்ச்சிக்கான மத்திய கவுன்சில் (CCRH) ஆனது சமீபத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. இந்த அறிவிப்பில் Senior Research Fellow பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் மட்டும் வரவேற்கப்படுகிறது. எனவே இப்பதிவை பயன்படுத்தி பணிக்கு தகுதியானவர்கள் மட்டும் உடனே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
வேலைவாய்ப்பு விவரங்கள்:
- தற்போது வெளியான மத்திய அரசு நிறுவனத்தின் வேலைவாய்ப்பு அறிவிப்பில், Senior Research Fellow பதவிக்கு என ஒரே ஒரு பணியிடம் மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வி நிலையங்களில் Homoeopathy பாடப்பிரிவில் கட்டாயம் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் கட்டாயம் பணிக்கு சம்பந்தப்பட்ட துறையின் பிரிவில் ஆராய்ச்சி பணியில் குறைந்தது 3 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
- 29-04-2022 அன்றைய தினத்தின் படி, விண்ணப்பிக்கும் நபர்கள் கட்டாயம் 35 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும் என்று அதிகபட்ச வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ.35,000/- வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் கட்டாயம் (Written Test / Interview) எழுத்து தேர்வு அல்லது நேரடியாக நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இடித்து குறித்த விரிவான தகவல்களை அறிவிப்பில் காணலாம்.
விண்ணப்பிக்கும் முறை:
இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் மட்டும் இப்பதிவின் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் மூலம் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் இணைக்கப்பட்டுள்ள படிவத்தை பதிவிறக்கம் செய்து சரியாக பூர்த்தி செய்து நேர்காணலின் (29.04.2022) போது கொண்டு சென்று கலந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடியவுள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.