Degree முடித்தவர்களுக்கான CCRAS நிறுவன வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!
ஆயுர்வேத அறிவியல் ஆராய்ச்சிக்கான மத்திய கவுன்சில் (CCRAS) ஆனது Research Officer, Pharmacist மற்றும் பல்வேறு பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்புவது குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு விவரங்கள்:
- ஆயுர்வேத அறிவியல் ஆராய்ச்சிக்கான மத்திய கவுன்சில் (CCRAS) காலியாக உள்ள பணியிடங்களுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள 38 பணியிடங்கள் பின்வருமாறு பிரிக்கப்பட்டுள்ளது.
- Research Officer (Ayurveda) பணிக்கு CCIM / NCISM அனுமதி பெற்ற மருத்துவ கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Ayurveda பாடப்பிரிவில் MD / MS Degree பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
- Pharmacist பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் B.Pharm அல்லது D.Pharm Degree பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
- Panchakarma Technician பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் Panchakarma பாடப்பிரிவில் Diploma Degree பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
Tamil Nadu’s Best TNPSC Coaching Center
- Research Officer (Information Technology) பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Information Technology, Computer Science பாடப்பிரிவில் M.Sc அல்லது Ph.D Degree பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
- இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் மருத்துவமனைகள் அல்லது மருத்துவ நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய துறைகளில் குறைந்தது 3 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
- இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 40 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமைக்கு தகுந்தாற்போல் மாத சம்பளம் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
- இந்த CCRAS நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் வாயிலாக தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 14.08.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.