மத்திய அரசு நிறுவனத்தில் 539 காலிப்பணியிடங்கள் – உதவித்தொகையுடன் பணியிடங்கள்..!
மத்திய அரசின் வேலைவாய்ப்பு திட்டங்களில் ஒன்றான தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் (NAPS) கீழ் மத்திய நிலக்கரி நிறுவனத்தில் (CCL) இருந்து ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. அந்த அறிவிப்பில் பல்வேறு பிரிவுகளில் Apprentice பணிக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க விரும்புவோருக்கான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே தொகுத்துள்ளோம். அதன் வாயிலாக இப்பணிகளுக்கு பதிவு செய்து கொள்ளுமாறு ஆர்வமுள்ளவர்களை கேட்டுக் கொள்கிறோம்.
வேலைவாய்ப்பு விவரங்கள்:
- மத்திய நிலக்கரி நிறுவனத்தில் பல்வேறு பிரிவுகளில் Apprentice பணிகளுக்கு என 539 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- விண்ணப்பதாரர்கள் 20.11.2021 தேதியினை பொறுத்து குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 30 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
- 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் அரசு அனுமதியுடன் செயல்படும் தொழிற்கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Best TNPSC Coaching Center – Join Now
- அவற்றுடன் NCVT & SCVT இவற்றில் ஏதேனும் ஒரு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
- பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.7,000/- வரை உதவித்தொகை வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலமாக அறிந்து அணுகலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
விருப்பமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் வரும் 05.12.2021 அன்றுக்குள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிவடையவுள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்கும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள்.