இந்திய சிமெண்ட் கார்ப்பரேஷனில் புதிய வேலைவாய்ப்பு – மாத சம்பளம்: ரூ.50,000/-
சிமெண்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலி பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் Consultant (Finance & Accounts) பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் உள்ளதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்களை கீழே வழங்கியுள்ளோம் ஆர்வமுள்ளவர்கள் இப்பதிவை பயன்படுத்தி தங்களின் பதிவுகளை செய்து கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | Cement Corporation of India Limited ( CCI) |
பணியின் பெயர் | Consultant (Finance & Accounts) |
பணியிடங்கள் | 02 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 17.02.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
CCI காலிப்பணியிடம்:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பில் Consultant (Finance & Accounts) பணிக்கு என்று தலா ஒரு பணியிடம் வீதம் மொத்தமாக 02 பணியிடங்கள் ஒதுக்கியுள்ளது.
CCI கல்வித் தகுதி:
இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு / அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் Inter / Final CA / ICWA முடித்திருப்பது அவசியமாகும். மேலும் விண்ணப்பதாரர்கள் MS Office / Computer operation போன்றவற்றில் நன்கு திறன் பெற்றவர்கள் மட்டும் இப்பணிக்கு விண்ணப்பித்தால் போதுமானதாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
CCI அனுபவ விவரம்:
விண்ணப்பதாரர்கள் குறைந்தது 8 ஆண்டுகள் ஏதேனும் ஒரு புகழ்பெற்ற அமைப்பின் நிதித் துறையில் பணிபுரிந்தவரக இருக்க வேண்டும்.
மேலும் Public Sector Undertaking களில் பணிபுரிந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் சிறந்த coaching center – Join Now
CCI வயது வரம்பு:
31.01.2022 அன்றைய நாளின் படி விண்ணப்பதாரர்கள் அதிகபட்ச வயதாக 40 வயது என்று நிர்ணயம் செய்துள்ளதால் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
CCI ஊதிய விவரம்:
இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் அதிகபட்சம் ரூ.50,000/- வரை மாத ஊதியம் மற்றும் கூடுதல் தொகை பெறுவார்கள்.
CCI தேர்வு முறை:
இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் 17.02.2022 அன்று நடைபெறும் நேர்காணல் மூலம் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். நேர்காணல் குறித்த முழு விவரங்களை அதிகாரபூர்வ அறிவிப்பில் காணலாம்.
CCI விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு 17.02.2022 அன்று தேவையான ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்களுடன் நேரில் சென்று கலந்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.