கூட்டுறவு வங்கியில் ரூ.35,000/- ஊதியத்தில் வேலை – உடனே விரையுங்கள் !
சிட்டிசன் கிரெடிட் கூட்டுறவு வங்கி லிமிடெட் (CCBL) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Probationary Officers and Probationary Associates பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு விவரங்கள்:
- சிட்டிசன் கிரெடிட் கூட்டுறவு வங்கி லிமிடெட்டில் (CCBL) காலியாக உள்ள Probationary Officers மற்றும் Probationary Associates பணிகளுக்கு என பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
- Probationary Officers பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் CA, CS, ICWA, CFA, MBA, LLM, M.Tech Degree அல்லது ஏதேனும் ஒரு Graduate Degree பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- Probationary Associates பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் ஏதேனும் ஒரு Graduate Degree பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- Probationary Officers பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்களின் வயது வரம்பு 30.06.2022 அன்றைய நாளின் படி, அதிகபட்சம் 30 வயது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
- தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.35,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இப்பணிகளுக்கு தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணல் (Personal Interview) மற்றும் எழுத்து தேர்வு (Online Written Test) மூலம் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 02.08.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.