CBSE 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை – ஆசிரியர்கள் கோரிக்கை!!!

0
CBSE 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை - ஆசிரியர்கள் கோரிக்கை!!!
CBSE 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை - ஆசிரியர்கள் கோரிக்கை!!!
CBSE 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை – ஆசிரியர்கள் கோரிக்கை!!!

சிபிஎஸ்இ 12ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வுகளின் போது கொரோனா தொற்று பரிசோதனை அவசியம் என்று ஆசிரியர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

செய்முறை தேர்வுகள்:

சிபிஎஸ்இ மாணவர்களுக்கு பள்ளிகள் கடந்த ஜனவரி மாதத்தில் திறக்கப்பட்டது. பள்ளிகள் திறக்கப்பட்ட பின்னர் மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு தயார்படுத்தும் பணியில் பள்ளிகள் ஈடுபடத் தொடங்கியது. இந்நிலையில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்டது. கொரோனா பாதிப்பு காரணமாக பள்ளிகள் முறையாக செயல்படாத காரணத்தால் மாணவர்கள் பொதுத்தேர்வுகளை ரத்து செய்யவும், ஆன்லைன் தேர்வுக்கும் கோரிக்கை வைத்தனர். ஆனால் மத்திய கல்வி அமைச்சர் மாணவர்களின் இந்த கோரிக்கையை ஏற்கவில்லை.

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் தீவிரமடையும் கொரோனா – கட்டுப்பாடுகள் தீவிரம்!!

பொதுத்தேர்வு ரத்து:

கொரோனா தொற்று தீவிரமடைந்து வருவதால் சிபிஎஸ்இ தேர்வு வாரியம் மாணவர்களின் நலன் கருதி சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகளை தள்ளி வைத்து கடந்த வாரம் உத்தரவிட்டது. இந்நிலையில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகளை ஏப்ரல் 1ம் தேதி முதல் ஜூன் 11ம் தேதிக்குள் முடிக்க முன்னதாக தேர்வு வாரியம் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, 12ம் வகுப்பு செய்முறை தேர்வுகள் நடக்க உள்ள நிலையில் சிபிஎஸ்இ வாரிய ஆசிரியர்கள் செய்முறை தேர்வுக்கு வரும் மாணவர்கள் அனைவருக்கும் கொரோனா தொற்று பரிசோதனை அவசியம் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

இன்று முதல் மே 4 வரை அனைத்து பள்ளிகளும் மூடல் – மாநில அரசு அறிவிப்பு!!

ஆசிரியர்களின் கருத்து:

சிபிஎஸ்இ செய்முறை தேர்வுகள் பல பள்ளிகளில் தொடங்கியுள்ள நிலையில் ஒரு சில மாணவர்கள் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் தேர்வில் கலந்து கொண்டுள்ளனர். இதனால் மற்ற மாணவர்களும் பாதிக்கும் சூழல் உள்ளது. இதனால் தேர்வில் கலந்து கொள்ளும் அனைத்து மாணவர்களுக்கும் கொரோனா தொற்று பரிசோதனை அவசியம் செய்யப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

TN Job “FB  Group” Join Now

கல்வி வாரியத்தின் பதில்:

இது தொடர்பாக பதில் அளித்த சிபிஎஸ்இ தேர்வு கட்டுப்பாட்டாளர் சன்யம் பரத்வாஜ், பெற்றோர்கள் இந்த விஷயங்களைப் பற்றி வெளிப்படையாக இருக்க வேண்டும், தங்கள் குழந்தைக்கு கொரோனா நேர்மறையாக இருந்தால் பள்ளிக்கு தெரிவிக்க வேண்டும். கோவிட்-19 காரணமாக சிபிஎஸ்இ எந்தவொரு மாணவரையும் கல்வி ரீதியாக பாதிக்க விடாது. இரண்டாவது வாய்ப்பு வழங்கப்படும், எனவே மாணவர்கள் இதனால் கவலை அடைய தேவையில்லை என்று கூறியுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!