அடுத்த கல்வியாண்டில் இருந்து சிபிஎஸ்இ பாடத்திட்டம்? விரைவில் வெளியாக உள்ள அறிவிப்பு!
புதுச்சேரியில் தனி கல்வி வாரியம் இல்லாததால் புதுவை, காரைக்கால் பிராந்தியங்களில் தமிழக பாடத்திட்டம் பின்பற்றப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது அடுத்த கல்வியாண்டில் இருந்து புதுச்சேரியில் சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமல்படுத்த உள்ளதாக முடிவு செய்துள்ளது.
பாடத்திட்டம்
புதுச்சேரியில் அதற்கென தனியாக கல்வி வாரியம் இல்லாததால் தமிழக பாடத்திட்டத்தை பின்பற்றி வருகிறது. இதனை தொடர்ந்து 2014-15ம் கல்வி ஆண்டு தொடக்கப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பில் சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து ஒவ்வொரு வகுப்பிற்கும் சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமல்படுத்தப்பட நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதன்படி படிப்படியாக கடந்த 2018-2019 கல்வி ஆண்டில் 5ம் வகுப்பு வரை சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டது. ஆனால் 6ம் வகுப்பில் சிபிஎஸ்இ பாடத்திட்டம் கொண்டு வரப்படவில்லை.
Exams Daily Mobile App Download
அதனால் 5ம் வகுப்பில் சிபிஎஸ்இ படித்த மாணவர்கள் 6ம் வகுப்பில் தமிழக பாடத்திட்டத்தை படிக்க மிகவும் சிரமப்பட்டு வந்தனர். அதன் காரணமாக 1 முதல் 12ம் வகுப்பு வரை சிபிஎஸ்இ பாடத்திட்டம் கொண்டு வர வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்தனர். தற்போது 6 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமல்படுத்தப்படுவது தொடர்பாக அரசு ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தற்போது புதுச்சேரி முழுவதும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கான ஹாப்பி நியூஸ் – ஒரே நேரத்தில் சம்பள உயர்வு & அகவிலைப்படி!
இது தொடர்பாக புதுவை பள்ளிக்கல்வித்துறை சார்பில் மத்திய அரசிடம் ஒப்புதல் கேட்டுள்ளது. மேலும் இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது, புதுச்சேரியில் 1 முதல் 12ம் வகுப்பு வரை என அனைத்து வகுப்பினருக்கும் சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் இதற்கு வழிகாட்டுதல்களும் பெறப்பட்டுள்ளது. மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்த பிறகு இத்திட்டம் அமல்படுத்தப்படும். இந்த கல்வியாண்டில் இதற்கான பணிகள் முடிவடையாது என்பதால் அடுத்த கல்வியாண்டில் புதுச்சேரியில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு சிபிஎஸ்இ பாடத்திட்டமாக மாற அதிக வாய்ப்புண்டு என்று தெரிவித்துள்ளார்.