சிபிஎஸ்சி பாடத்திட்டங்கள் 30% குறைப்பு
சிபிஎஸ்சி பள்ளிகளில் உள்ள மாணவர்களுக்கு பாடத்திட்டங்களினை 30% வரை குறைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அது குறித்த தகவல்களை எங்கள் வலைத்தளம் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.
இந்திய முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் பரவலால் கடந்த மார்ச் மாதம் 16 முதல் பள்ளிகள் கல்லூரிகள் என அனைத்தும் மூடப்பட்டன. இதனால் பல்வேறு தேர்வுகள் தள்ளிவைக்கப்படும், ரத்து செய்யப்பட்டும் வருகின்றது.
இதேபோல் மத்திய இடைநிலை கல்வி வாரியமானது 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்தும் மேலும் இதர வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைனில் தேர்வு நடத்தலாம் எனவும் ஆலோசித்து வருகிறது.
அடுத்து வரும் கல்வி ஆண்டும் தொடங்க தாமதமாகும் என்பதனால் மாணவர்களின் நலன் கருதி பாடத்திட்டங்கள் குறைக்கப்பட வேண்டும் என ஆலோசிக்கப்படுகிறது. இந்நிலையில் அது குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி, 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு 30% வரை பாடங்கள் குறைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புதிய கல்வி அட்டவணையின் படியே அடுத்து வகுப்புகள் நடைபெற உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |