ஆகஸ்ட் 16ல், 12ம் வகுப்பு துணைத்தேர்வுகள் தொடக்கம் – CBSE வாரியம் அறிவிப்பு!
மத்திய இடைநிலைக்கல்வி வாரியத்தின் கீழ் 12ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ஆகஸ்ட் 16ம் தேதி முதல் துணை தேர்வுகள் தொடங்க இறுதிப்பதாக கல்வி வாரியம் அதிகாரபூர்வ தகவலை வெளியிட்டுள்ளது.
CBSE வாரியம்:
நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்புகள் காரணமாக கல்வி நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டது. இதனால் முன்னதாக சிபிஎஸ்இ மாணவர்களுக்கு பாட திட்டம் குறைக்கப்பட்டு மே மாதத்தில் பொதுத்தேர்வுகள் நடத்த கல்வி வாரியம் திட்டமிட்டது. ஆனால் தொற்று தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தி வந்த நிலையில், 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் ரத்து செய்யட்டப்பட்டது. இதனால் மாற்று முறையில் மதிப்பெண்களை வழங்க அரசு முடிவு செய்து அதற்கான வழிமுறைகளையும் வெளியிட்டது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,957 பேருக்கு கொரோனா உறுதி – சுகாதாரத்துறை அறிக்கை!
இந்நிலையில், ஜூலை 30ம் தேதி மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் 12ம் வகுப்பு முடிவுகள் வெளியிடப்பட்டது. அதில், 99.37% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது. இந்த தேர்வு முடிவுகளில் திருப்தி இல்லாத மாணவர்களுக்கு ஆகஸ்ட் மாதத்தில் சிறப்பு தேர்வுகள் நடத்தப்பட்டு, அந்த மதிப்பெண்கள் இறுதியானதாக கருதப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இன்று 12ம் வகுப்பு மாணவர்களுக்கான துணை தேர்வுகளின் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
அதன்படி, சிபிஎஸ்இ பிளஸ் 2 துணைத் தேர்வு ஆகஸ்ட் 16-ம் தேதி முதல் செப்டம்பர் 15-ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 19 பாடப்பிரிவுகளுக்கு மட்டுமே துணை தேர்வுகள் நடக்க இருப்பதாகவும், தேர்வுக்கான விண்ணப்ப விவரங்கள் விரைவில் பிவெளியிடப்படும் என்றும் சிபிஎஸ்இ தேர்வுக்கட்டுப்பாட்டு அதிகாரி சன்யம் பரத்வாஜ் தெரிவித்துள்ளார். துணை தேர்வுகளுக்காக மாணவர்கள் தேர்வு கட்டணம் செலுத்த தேவையில்லை என்றும், முன்னரே தேர்வு கட்டணம் செலுத்திய தனித்தேர்வர்கள் விண்ணப்ப கட்டணம் மீண்டும் செலுத்த தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.