ஜூன் 16 முதல் CBSE பள்ளிகள் திறப்பு – மாநில அரசு முடிவு!
வரும் ஜூன் 13ம் தேதி முதல் மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூர் நகரத்தில் உள்ள அனைத்து வகையான மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (CBSE) பள்ளிகள் மீண்டுமாக திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகள் திறப்பு
தற்போது மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூர் நகரத்தை அடிப்படையாகக் கொண்ட மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (CBSE) பெரும்பாலான பள்ளிகள் ஜூன் 16 முதல் 2022-23 புதிய கல்வியாண்டை தொடங்கத் தயாராகி வருகின்றன. அந்த வகையில் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு 1 முதல் 12 வரையுள்ள வகுப்புகள் முழு அளவிலான முறையில் தொடங்க இருக்கிறது. இப்போது பள்ளிகளை மீண்டும் திறப்பது தொடர்பாக பள்ளி நிர்வாகங்கள் பெற்றோர்களுக்கு சில அறிவுறுத்தல்களை வழங்கத் தொடங்கியுள்ளன.
1 முதல் 9ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – பள்ளிகள் திறப்புக்கான முன்னேற்பாடுகள் தீவிரம்!
இப்போது ஜூன் 15ம் தேதி வரை 12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வின் கடைசித் தாள் நடைபெறுவதை கருத்தில் கொண்டு, அடுத்த நாள் முதல் புதிய கல்வியாண்டுக்கான வகுப்புகளை தொடங்க திட்டமிட்டப்பட்டுள்ளது. இது குறித்து இந்தூர் சஹோதயா பள்ளி வளாகத்தின் முன்னாள் தலைவர் யுகே ஜா கூறுகையில், ‘இந்தூர் பள்ளிகள் அனைத்தும் புதிய கல்வியாண்டிற்காக வெவ்வேறு தேதிகளில் மீண்டும் திறக்க திட்டமிடப்பட்டுள்ளன. இருப்பினும், பெரும்பாலான பள்ளிகள் மூன்றாம் வாரத்தில் இருந்து வகுப்புகளைத் தொடங்கும்’ என்று தெரிவித்தார்.
அந்த வகையில் இம்மாநிலத்தில் 100 சதவீத வருகையுடன் பள்ளிகள் முழு வீச்சில் திறக்கப்பட இருக்கிறது. மேலும் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்கள் புதிய அமர்வில் இணைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், கொரோனா தொடர்பான வழிகாட்டுதல்கள் எதுவும் மாநில அரசு மற்றும் பள்ளிக் கல்வித்துறை அல்லது சிபிஎஸ்இ வாரியத்தால் வெளியிடப்படாததால், பள்ளி நிர்வாகங்கள் கை சுத்திகரிப்பு மற்றும் முகக்கவசம் அணிவது தொடர்பாக வழங்கப்பட்ட பழைய வழிகாட்டுதல்களை செயல்படுத்தும் என்று தெரிகிறது.
Exams Daily Mobile App Download
மறுபுறத்தில் நகரத்தை அடிப்படையாகக் கொண்ட பெரும்பாலான தனியார் பள்ளிகளும் ஜூன் 16 முதல் புதிய கல்வி அமர்வைத் தொடங்க தயாராகி வருகின்றன. இதுவரை பெரும்பாலான பள்ளிகளில் புதிய கல்வி அமர்வுக்கான சேர்க்கை செயல்முறை நடந்து வருகிறது. மேலும், இப்பள்ளிகளில் ஆப்லைன் வகுப்புகள் எந்த கட்டுப்பாடுகளும் இல்லாமல் வழக்கமான முறையில் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் இந்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளும் ஜூன் 13 ஆம் தேதி முதல் புதிய வகுப்புகளை தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.