சிபிஎஸ்இ மாணவர்களுக்கு மறுதேர்வு – தேர்வு வாரியம் அறிவிப்பு!!
சிபிஎஸ்இ பள்ளிகளில் நடத்தப்பட்ட செய்முறை தேர்வுகளில் கொரோனா பாதிப்பு காரணமாக சில மாணவர்கள் பங்கேற்கவில்லை. தற்போது அந்த மாணவர்களுக்காக மறுதேர்வை நடத்தவுள்ளனர். அதற்கான தேதியும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
செய்முறை மறுதேர்வு:
கடந்த ஆண்டு முதல் நாடு முழுவதும் கொரோனா பரவல் கண்டறியப்பட்டு வருகிறது. இதன் காரணமாக அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டது. இந்நிலையில் ஆண்டு இறுதியில் கொரோனா கட்டுக்குள் வந்தது. இதன் காரணமாக இந்த ஆண்டு தொடக்கத்தில் சிபிஎஸ்இ பள்ளிகள் திறக்கப்பட்டது. மேலும் 10 மற்றும் 12 வகுப்பிற்கு செய்முறை தேர்வுகளும் நடத்தப்பட்டது.
மேலும் பொதுத்தேர்வுகள் வருகிற மே மாதம் 4ம் தேதி துவங்கி ஜூன் மாதம் 11ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்நிலையில் சிலர் கொரோனா பரவல் காரணமாக செய்முறை தேர்வுகளை எழுதவில்லை. தற்போது நாட்டில் மீண்டும் கொரோனா வேகமெடுத்து வருகிறது. இதனால் பள்ளி மாணவர்கள் அல்லது பெற்றோர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
1 முதல் 5ம் வகுப்புகளுக்கான தேர்வுகள் ரத்து – மாநில அரசு அறிவிப்பு!!
சில மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. மேலும் சில மாணவர்களின் குடும்பங்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இதன் காரணமாக சிபிஎஸ்இ மாணவர்கள் செய்முறை தேர்வுகளில் பங்கேற்க முடியவில்லை. தற்போது அவர்களுக்காக சிபிஎஸ்இ மறுதேர்வு நடத்த முடிவு செய்துள்ளது. அதன்படி இவர்களுக்கான மறுதேர்வு வருகிற ஜூன் மாதம் 11ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று சிபிஎஸ்இ தேர்வு கட்டுப்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்