CBSE +2 முடிவுகள் வெளியீடு – பொறியியல், கலை கல்லூரிகளில் சேருவதற்கு ஜூலை 27 வரை கால அவகாசம்!
சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டதால் கல்லூரி மாணவர் சேர்க்கை தாமதமானது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சிபிஎஸ்இ பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில் உயர் கல்வித்துறை புதிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. அறிவிப்பின்படி பொறியியல், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர சிபிஎஸ்இ மாணவர்களுக்கு அவகாசம் அளிக்கப்பட்டிருக்கிறது.
புதிய அறிவிப்பு:
சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகின. அதன்படி, மாணவர்கள் தங்களது முடிவுகளை cbse.gov.in, cbseresults.nic.in, results.cbse.nic.in, results.gov.in , digilocker.gov.in ஆகிய இணையதளங்கள் மூலமாக பார்த்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பில் மொத்தமாக 92.71% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதில் மாணவர்கள் 91.25% யும் மாணவிகள் 93 % தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 98. 83 % தேர்ச்சி விகிதம் பெற்று கேரள மாநிலம் திருவனந்தபுரம் முதலிடம் பிடித்துள்ளது.
Exams Daily Mobile App Download
மேலும் சென்னை மண்டலமானது 97.79% தேர்ச்சி பெற்று மூன்றாம் இடத்தை பெற்றுள்ளது. 98.16% தேர்ச்சி பெற்று பெங்களூரு மண்டலம் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகளில் சேர வரும் 27-ம் தேதி வரை அவகாசம் அளித்து உயர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதாவது CBSE 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், உயர்கல்வித்துறை இந்த புதிய உத்தரவை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியாகி 5 நாட்கள் வரை கலை மற்றும் அறிவியல், பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்திருந்தார்.
தமிழக அங்கன்வாடியில் புதிய வேலைவாய்ப்பு – 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
அதே போல் பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசம் கடந்த 17 ஆம் தேதி நிறைவடைந்த நிலையில், அதற்கான கால அவகாசம் தேதி குறிப்பிடாமல் நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில்163 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் உள்ள 1.40 லட்சம் இடங்களில் சேர 4 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். மேலும் 400க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் சேர இதுவரை 2 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர் என்று உயர்கல்வித்துறை தெரிவித்திருக்கிறது.