CBSE பாடத்திட்ட மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – கட்டணம் விலக்கு!
சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர் கொரோனா தொற்றால் உயிரிழந்திருந்தால் பத்தாம் வகுப்பு மாணவர்கள் கட்டணம் செலுத்த வேண்டாம் என்று சிபிஎஸ்இ தேர்வு கட்டுப்பாட்டாளர் கூறியுள்ளார்.
தேர்வு கட்டணம்:
நாடு முழுவதும் கொரோனா தொற்று தீவிரமாக பரவியது. முதல் மற்றும் இரண்டாம் அலை என கொரோனா கோரத்தாண்டவம் ஆடியதால் பலர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. மேலும் தொண்டு நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களும் பல்வேறு உதவிகளை செய்து வருகின்றன.
TNPSC வேலைவாய்ப்புகள் 2021 – விண்ணப்பிக்க இன்னும் 2 நாள் மட்டுமே …!
பல்வேறு மாநிலங்களில் கொரோனா தாக்கத்தால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. தற்போது சிபிஎஸ்இ படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் கொரோனா தாக்கத்தால் உயிரிழந்து இருக்கும் பட்சத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்கள் கட்டணம் செலுத்த வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இது குறித்து சிபிஎஸ்இ தேர்வு கட்டுப்பாட்டாளர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Oil India நிறுவனத்தில் 500+ காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!
அதில் கொரோனா தொற்று நாட்டை மிகவும் பாதித்துள்ளது என்றும் அது மாணவர்கள் மீது ஏற்படுத்திய தாக்கத்தை கருத்தில் கொண்டு சிறப்பு நடவடிக்கையாக, அடுத்த ஆண்டு சிபிஎஸ்இ 10ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் எழுதும் மாணவர்கள் கொரோனா பாதிப்பால் பெற்றோர் அல்லது பாதுகாவலரை இழந்தவர்களாக இருந்தால் அவர்கள் பதிவு கட்டணமோ, தேர்வு கட்டணமோ செலுத்த வேண்டாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் பொதுத்தேர்வுகள் எழுதும் மாணவர்களின் விவரங்களை சமர்ப்பிக்கும் போது கொரோனா பாதிப்பால் பெற்றோர் அல்லது பாதுகாவலரை இழந்த மாணவர்களின் தகவல்களையும் பள்ளிகள் ஆராய்ந்து வழங்கும் எனவும் சிபிஎஸ்இ தேர்வு கட்டுப்பாட்டாளர் கூறியுள்ளார்.